தமிழக அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு முக்கிய அறிவிப்பு – ஒழுங்கு நடவடிக்கைகள் ரத்து!
தமிழக அரசு பள்ளி ஆசிரியர்கள் பல்வேறு கோரிக்கைகள் முன்னிறுத்தி வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டதால் ஆசிரியர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டது. தற்போது இந்த நடவடிக்கைகள் ரத்து செய்யப்படுவதாக பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது.
ஒழுங்கு நடவடிக்கைகள்:
தமிழக அரசு பள்ளி ஆசிரியர்கள் கடந்த சில வருடங்களாக பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்து வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதன்படி கடந்த 2019 ஆம் தொடக்கத்தில் அரசு பள்ளி ஆசிரியர்கள் ஜாக்டோ ஜியோ அமைப்பினருடன் சேர்ந்து ஊதிய உயர்வு, புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்று பல கோரிக்கைகளை முன்வைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தமிழகத்தில் ஜூலை 12 வரை முழு ஊரடங்கு நீட்டிப்பு? முதல்வர் இன்று ஆலோசனை!
இதற்காக பல முறை வேலை நிறுத்த போராட்டத்திலும் அரசு பள்ளி ஆசிரியர்கள் ஈடுபட்டனர். இதன் காரணமாக போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்கள் மீது பள்ளிக் கல்வித்துறை சார்பில் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது. மேலும் சில இடங்களில் போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்கள் பணியிடை நீக்கமும் செய்யப்பட்டு வந்தனர். பின் இந்த நடவடிக்கையை திரும்ப பெற வேண்டும் என்று தொடர்ந்து கோரிக்கைகள் எழுந்த வண்ணம் இருந்து வந்தது.
TN Job “FB Group” Join Now
இதையடுத்து பல நடவடிக்கைகளை திரும்ப பெற அரசு உத்தரவிட்டது. இருப்பினும் பல மாவட்டங்களில் ஆசிரியர்கள் மீதான நடவடிக்கைகள் திரும்ப பெறவில்லை என்று கூறப்பட்டு வந்தது. இந்நிலையில் போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்கள் மீதான ஒழுங்கு நடவடிக்கைகளை ரத்து செய்யவும், பணியிடை நீக்கம் செய்யப்பட்ட ஆசிரியர்களை மீண்டும் பணியமர்த்த வேண்டும் என்று மாவட்ட முதன்மை கல்வித்துறை அதிகாரிகளுக்கு பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. தற்போது அதற்கான அறிவிப்பை பள்ளிக் கல்வித்துறை ஆணையர் நந்தகுமார் அவர்கள் வெளியிட்டுள்ளார்.
My fav work government job
👌