தமிழகத்தில் தட்டச்சு பயிற்சி மையங்களுக்கு தடை – தொழில்நுட்ப கல்வி இயக்ககம் உத்தரவு!!
தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்து உள்ள காரணத்தால் மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு தொழில்நுட்ப கல்வி இயக்ககம் தட்டச்சு பயிற்சி மையங்கள் இயங்க தடை விதித்துள்ளது.
கொரோனா தொற்று:
தமிழகத்தில் கொரோனா தொற்றின் பாதிப்புகள் கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாக மக்களை அச்சறுத்தி வருகிறது. தொற்றின் முதல் அலை சற்று குறைந்த காரணத்தால் ஊரடங்கில் தளர்வுகள் அளிக்கப்பட்டிருந்த நிலையில் கொரோனா பரவலின் இரண்டாம் அலை கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக தமிழகத்தில் மீண்டும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. இதனால் தமிழகத்தில் இரவு நேர மற்றும் வார இறுதி நாள் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.
சென்னையில் மே மாதம் கொரோனா பாதிப்பு உச்சத்தில் இருக்கும் – மாநகராட்சி ஆணையர்!!
தொழிநுட்ப கல்வி இயக்ககம்:
கொரோனா பரவல் அதிகரித்து உள்ள சூழலில் மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு தமிழகம் முழுவதும் உள்ள அரசு மற்றும் தனியார் தட்டச்சு பயிற்சி மையங்கள் இயங்குவதற்கு தொழிநுட்ப கல்வி இயக்ககம் தடை விதித்துள்ளது. மேலும் வகுப்புகள் ஆன்லைன் முறையில் நடத்துவதற்கு அனுமதி வழங்கி தொழில்நுட்பக் கல்வி இயக்குநரும், தொழில்நுட்பத் தேர்வுகள் வாரியத்தின் தலைவருமான கே.விவேகானந்தன் அறிக்கை அனுப்பியுள்ளார்.
தேர்வுகள் ஒத்திவைப்பு:
மறுஉத்தரவு வரும் வரை தட்டச்சு பயிற்சி மையங்களுக்கு மாணவர்கள் வருகை புரிவதை தவிர்க்க வேண்டும் என்றும் அறிவித்துள்ளது. முன்னதாக தட்டச்சு, சுருக்கெழுத்து, கணக்கியல் போன்ற தொழிநுட்ப தேர்வுகள் கொரோனா பரவல் காரணமாக தள்ளிவைக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. மேலும், அரசு கணினி சான்றிதழ் தேர்வு ஆன்லைன் விண்ணப்ப பதிவிற்கு ஏப்ரல் 26ம் தேதி இறுதி நாளாகும்.
Velaivaippu Seithigal 2021
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்