கொரோனா மூன்றாம் அலை தாக்கம் – மருத்துவ கல்வி இயக்குநரகம் சுற்றறிக்கை!
நாடு முழுவதும் கொரோனா இரண்டாம் அலை தாக்கம் குறைந்து கொண்டே வரும் நேரத்தில் கொரோனா மூன்றாம் அலையை எதிர்கொள்ள தமிழகத்தில் உள்ள மருத்துவமனைகள் தயார் நிலையில் இருக்க வேண்டும் என மருத்துவ கல்வி இயக்குநரகம் தெரிவித்துள்ளது.
கொரோனா மூன்றாம் அலை:
நாடு முழுவதும் கடந்த ஆண்டு முதல் கொரோனா பரவல் பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தியது. அதனை தொடர்ந்து இந்த ஆண்டும் கொரோனாவால் பல உயிரிழப்புகள் ஏற்பட்டன. முதல் அலையில் 65 வயதிற்கு மேற்பட்டவர்கள் அதிகம் பேர் பாதிக்கப்பட்டனர். இரண்டாம் அலையில் 35 வயதிற்கு மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டனர்.
தமிழகத்தில் 6 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு – வானிலை அறிக்கை!!
மேலும் கொரோனா மூன்றாம் அலை செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் தாக்க வாய்ப்புள்ளதாக மருத்துவ வல்லுநர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். குறிப்பாக கொரோனா மூன்றாம் அலை குழந்தைகளை அதிகம் பாதிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மருத்துவ கல்வி இயக்குநரகம் சார்பில் தமிழகத்தில் உள்ள அனைத்து மருத்துவமனை முதல்வர்கள் மற்றும் இயக்குநர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.
அதில், கொரோனா 3-வது அலையை எதிர்கொள்ள தயாராக இருக்க வேண்டும். மருத்துவமனைகளில் ஆக்சிஜன் வசதியுடன் கூடிய படுக்கைகளும், ஐசியு படுக்கை வசதிகளும் ஏற்படுத்திட வேண்டும். மருத்துவர்கள், செவிலியர்கள் சுழற்சி முறையில் பணியில் அமர்த்தப்பட வேண்டும். குழந்தைகள் பிரிவில் நான்கில் ஒரு பகுதி செவிலியர்களை அவசரக்கால பணிக்காக அனுமதிக்கப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
TN Job “FB Group” Join Now
மேலும் பொது மருத்துவம் மற்றும் மயக்கவியல் துறை மருத்துவர்களையும் கொரோனா மூன்றாம் அலையை எதிர்கொள்ள தயார்படுத்த வேண்டும். கொரோனா மூன்றாம் அலை எப்போது வேண்டுமானாலும் தாக்கும். இதனால் மருத்துவமனை முதல்வர்கள், இயக்குநர்கள் தயாராக இருக்க வேண்டும். குழந்தைகள் மருத்துவமனைகளில் 100 படுக்கைகள் பிரேத்யேகமாக தயார் நிலையில் இருக்க வேண்டும். ஆக்சிஜன் வசதியுடன் படுக்கைகளும் ஐசியு வசதியுடன் படுக்கைகளும் எப்போதும் தயாராக இருக்க வேண்டும் என தெரிவித்துள்ளது.