ஜூன் 15 முதல் பள்ளிகள் மீண்டும் திறப்பு? கல்வி இயக்குனரகம் அறிக்கை!!
ராஜஸ்தான் மாநிலத்தில் மாநில கல்வி வாரியம் புதிய கல்வி ஆண்டிற்கான நாட்காட்டியை வடிவமைத்து அரசுக்கு அனுப்பியுள்ளது. அதன்படி, ஜூன் 15ம் தேதி முதல் பள்ளிகள் மீண்டும் திறக்க வாய்ப்பிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதிய கல்வி ஆண்டு:
இடைநிலைக் கல்வி இயக்குநரகம் ராஜஸ்தான் மாநில அரசுக்கு புதிய கல்வி ஆண்டிற்கான நாட்காட்டியை வடிவமைத்து முழுமையான திட்டத்தை அனுப்பியுள்ளது. அதன்படி, 2021 புதிய வகுப்புகள் ஜூன் 15ம் தேதி முதல் தொடங்க இருக்கிறது. கொரோனாவின் மூன்றாவது அலையினால் நாட்டில் விரைவில் பாதிப்புகள் ஏற்படும். இதனால் பள்ளிகள் அப்போது மூடப்படும் என்றும் ஆன்லைன் முறையில் வகுப்புகள் தொடரும் என்றும் கூறப்பட்டுள்ளது.
TN Job “FB Group” Join Now
பள்ளிகளின் முழு ஆண்டுக்கான நாட்காட்டியான ‘சிவிரா பஞ்சங்’ குறித்த தகவல் வெளியிடப்பட்டுள்ளது. அதில், கடந்த ஆண்டு முழுவதும் நேரடி வகுப்புகள் நடக்காத நிலையில், ஜூன் 15 முதல் ஜூலை 15ம் தேதி வரை ஒரு மாதம் கடந்த ஆண்டுக்கான பாடங்கள் மாணவர்களுக்கு திருப்புதல் செய்யப்படும். ஜூலை 16 முதல் அதில் இருந்து தேர்வுகள் நடத்தப்படும். அதில் சரியாக பயிற்சி பெறாத மாணவர்களுக்கு செப்டம்பர் 15 வரை அவகாசம் அளிக்கப்படும்.
கொரோனாவால் உயிரிழக்கும் GDS ஊழியரின் வாரிசுக்கு பணி – அஞ்சல் தலைமையகம் அறிவிப்பு!
நவம்பர் 3 முதல் 13 வரை இடைநிலை விடுமுறை மற்றும் டிசம்பர் 25 முதல் 31ம் தேதி வரை குளிர்கால விடுமுறை அளிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 2021 -2022 கல்வி ஆண்டுக்கான இறுதி தேர்வுகள் முடிந்த பிறகு 2022 மே 1 முதல் அடுத்த கல்வி ஆண்டு தொடங்கும். மே 17 முதல் ஜூன் 30 ம் தேதி வரை கோடை விடுமுறை அளிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளது. அரசிடம் அனுப்பியுள்ள இந்த திட்டத்தில் மாற்றங்கள் ஏற்படவும் வாய்ப்புள்ளதாக இடைநிலைக் கல்வி இயக்குநர் பிகானேர் சவுரப் சுவாமி அறிவித்துள்ளார்.
School should open