தன் கர்ப்பத்தை பற்றி கூற பயந்த ‘ராஜா ராணி 2’ சீரியல் ஆல்யா – இயக்குனரின் ஓபன் டாக்!
விஜய் டிவியின் சூப்பர் ஹிட் இயக்குனர் பிரவீன் பென்னட் ஒரு பேட்டியில் நடிகை ஆல்யா தான் கர்பமானதை அவரிடம் கூற மிகவும் பயந்து விட்டதாகவும், பல நாட்கள் கழித்து தான் அவரிடம் சொன்னதாகவும் கூறியுள்ளார்.
இயக்குனர் பிரவீன்:
விஜய் டிவியின் சீரியல் இயக்குனர்களில் முதல் இடத்தில் இருப்பவர் இயக்குனர் பிரவீன் பென்னட். இவரின் இயக்கத்தில் நடிக்க வேண்டும் என்று பல பிரபலங்களும் காத்திருக்கின்றனர். இவர் எடுக்கும் சீரியல் என்றாலே அது மெகா ஹிட் தான். இந்த புகழ் சாதாரணமாக பிரவீனுக்கு கிடைத்து விடவில்லை. அவர் இதுவரை இயக்கியுள்ள அனைத்து தொடர்களும் பெற்றுள்ள வெற்றி தான் இதற்கு சாட்சி. தற்போது விஜய் டிவியில் ஒரே நேரத்தில் பாரதி கண்ணம்மா, ராஜா ராணி 2, நம்ம வீட்டு பொண்ணு ஆகிய 3 தொடர்களை இயக்கியுள்ளார்.
Vijay TV BIGG BOSS வீட்டில் இருந்து 5 லட்சம் பணத்துடன் வெளியேறியது இவர் தானா? ரசிகர்கள் ஷாக்!
முதல் இரண்டு சீரியல்களும் ப்ரைம் டைம் முக்கிய தொடர்கள், நம்ம வீட்டு பொண்ணு இல்லத்தரசிகளின் ஆல்டைம் ஃபேவரிட் நேரமான மேட்னி நேர தொடர். தற்போது இயக்குனர் பிரவீனின் 2 வது மகனின் முதல் பிறந்த நாள் விழா மிகவும் சிறப்பாக கொண்டாடப்பட்டது. சின்னத்திரையின் அனைத்து நட்சத்திரங்களும் இந்த விழாவில் கலந்து கொண்டனர். இதன் பிறகு பிரவீன் அவரது மனைவி சாய் பிரமோதித்தா உடன் சேர்ந்து பேட்டி ஒன்றை அளித்துள்ளார். அதில், ராஜா ராணி 2 ஹீரோயின் நடிகை ஆல்யாவின் கர்ப்பம் குறித்து கேள்வி கேட்கப்பட்டது.
ஜீ தமிழ் ‘செம்பருத்தி’ சீரியல் கதிர் யார் தெரியுமா? நெகிழ வைக்கும் நிஜ வாழ்க்கை! ரசிகர்கள் ஷாக்!
அதற்கு, பாரதி கண்ணம்மா சீரியலில் கண்ணம்மா கதாபாத்திரத்தில் ரோஷினி விலக இருந்ததை அடுத்து புதிதாக ஒருவரை நடிக்க வைக்க பலரையும் தான் தேடி வந்தது ஆல்யாவிற்கு தெரியும், அதனால் என்னிடம் தான் கர்ப்பமாக இருப்பதை சொல்ல வரும் போதெல்லாம் தான் டென்ஷன் ஆக இருப்பதை அறிந்து சொல்லாமல் சென்று விடுவார். இப்படியே பல நாட்கள் சென்று விட்டது. இறுதியில், வினுஷாவை தேர்வு செய்து போட்டோவை காண்பித்த போது நன்றாக இருப்பதை கூறினார். ஆனால் வேறு ஒன்றும் சொல்ல வில்லை. இறுதியாக புதிய கண்ணம்மாவிற்கு நடத்தப்பட்ட டெஸ்ட் ஷூட் முடிந்து சக்சஸ் ஆன பின்னர் தான் தனது கர்ப்பத்தை பற்றி கூறினார் என்று கூறியுள்ளார்.