நேரடி மானியத்திட்டத்தின் மூலமாக ரூ.50 ஆயிரம் கோடி மிச்சம் – மத்திய அரசு அறிவிப்பு!
நேரடி மானியத் திட்டத்தின் மூலமாக பணியாளர்களுக்கான மானியத் தொகைகள் அனைத்தும் அவர்களின் வங்கி கணக்கிற்கே செலுத்தப்படுவதால் ரூ.50,000 கோடி மிச்சப்படுத்தப்பட்டுள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.
நேரடி மானியத்திட்டம்:
நேரடி மானியத் திட்டத்தின் மூலமாக மத்திய அரசின் பல்வேறு உதவி திட்டங்கள் மற்றும் மானியத் தொகைகள் அனைத்தும் பயனாளர்களின் வங்கி கணக்கிற்கே நேரடியாகவே செலுத்தப்படுகிறது. அதாவது, 53 மத்திய அமைச்சரகங்கள் மற்றும் துறைகளை சார்ந்த 312 திட்டங்களுக்கு நேரடி மானியத்திட்டம் தான் அமல்படுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு நேரடி மானிய திட்டம் அமல்படுத்தப்பட்டதன் காரணமாக மத்திய அரசு பல கோடிகளை மிச்சப்படுத்தியுள்ளது.
அதாவது, கடந்த 2020 – 21 ஆம் நிதியாண்டில் மட்டுமே ரூபாய் 44,000 கோடி மிச்சப்படுத்தப்பட்டதாகவும், கடந்த 2021 – 2022 ஆம் ஆண்டில் ரூபாய் 50 ஆயிரம் கோடி மிச்ச படுத்துள்ளதாகவும் மத்திய அரசு தற்போது அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த நேரடி மானிய திட்டத்திலேயே அதிகபட்சமாக பொது விநியோகத் திட்டத்தில் தான் ரூபாய் 33,600 கோடி ரூபாய் மிச்சப்படுத்தப்பட்டுள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. இதனை அடுத்து உரம் மானியத் திட்டத்தின் மூலமாக 8,700 கோடி ரூபாயும், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு துறை திட்டத்தில் ரூ.7500 கோடி மிச்சப்படுத்திள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.