தமிழகத்தில் ஜூன் 28 முதல் நீதிமன்றங்களில் நேரடி விசாரணை – தலைமை பதிவாளர் அறிவிப்பு!

0
தமிழகத்தில் ஜூன் 28 முதல் நீதிமன்றங்களில் நேரடி விசாரணை - தலைமை பதிவாளர் அறிவிப்பு!
தமிழகத்தில் ஜூன் 28 முதல் நீதிமன்றங்களில் நேரடி விசாரணை - தலைமை பதிவாளர் அறிவிப்பு!
தமிழகத்தில் ஜூன் 28 முதல் நீதிமன்றங்களில் நேரடி விசாரணை – தலைமை பதிவாளர் அறிவிப்பு!

தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக நீதிமன்றங்களுக்கு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டதை தொடர்ந்து, ஜூன் 28 முதல் கீழமை நீதிமன்றங்களில் நேரடி விசாரணை தொடங்கப்படும் என சென்னை உயர் நீதிமன்ற தலைமை பதிவாளர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

உயர் நீதிமன்றம் அறிவிப்பு:

தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை தாக்கம் காரணமாக பல ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் தொற்று எண்ணிக்கை குறைந்த காரணத்தினால் பல தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி அனைத்து கடைகளும் மாலை 7 மணி வரை திறந்திருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசு அலுவலங்கள் செயல்பட அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு மின்சார வாரியம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு – ஜூன் 24 மின்தடை!

இந்நிலையில் ஏற்கனவே கொரோனா கட்டுப்பாடு நடவடிக்கையாக கீழமை நீதிமன்றங்களில் நேரடி மனுதாக்கல் செய்யும் நடைமுறை முழுவதுமாக நிறுத்தப்படுவதாகவும், அதற்கு மாறாக நீதிமன்ற வளாகத்தின் வெளியே வைக்கப்படும் பெட்டிகளில் மனுக்களைப் போட வேண்டும் என தெரிவிக்கப்பட்டது. ஜாமீன் மனுக்கள் அனைத்தும் காணொலி மூலமாக மட்டுமே விசாரிக்கப்பட்டு வந்தன.

TN Job “FB  Group” Join Now

இந்நிலையில் தொடர்ந்து தினசரி கொரோனா தொற்று எண்ணிக்கை 7 ஆயிரத்திற்கு கீழ் வந்த காரணத்தினால் வருகிற ஜூன் 28 ஆம் தேதி முதல் அனைத்து கீழமை நீதிமன்றங்களிலும் நேரடி விசாரணை மீண்டும் தொடங்கப்படும் என சென்னை உயர்நீதிமன்ற தலைமை பதிவாளர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!