அண்ணா பல்கலை இறுதியாண்டு மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் – செப்.1 முதல் தொடக்கம்!

0
அண்ணா பல்கலை இறுதியாண்டு மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் - செப்.1 முதல் தொடக்கம்!
அண்ணா பல்கலை இறுதியாண்டு மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் - செப்.1 முதல் தொடக்கம்!
அண்ணா பல்கலை இறுதியாண்டு மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் – செப்.1 முதல் தொடக்கம்!

தமிழகத்தில் நாளை (செப்.1) முதல் பள்ளி மற்றும் கல்லூரிகளை திறக்க அரசு அனுமதி வழங்கிய நிலையில், அண்ணா பல்கலைக்கழக பொறியியல் கல்லூரிகளில் இறுதியாண்டு மாணவர்களுக்கு மட்டும் நாளை நேரடி வகுப்புகள் துவங்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கல்லூரிகள் திறப்பு:

தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை தாக்கம் காரணமாக பள்ளி மற்றும் கல்லூரிகள் திறக்கப்படாமல் ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில் கொரோனா பரவல் தற்போது குறைந்து வருவதால் பல்வேறு தளர்வுகள் வழங்கப்பட்டுள்ளது. அதன் படி நாளை (செப்.1) முதல் பள்ளிகளில் உயர்நிலை வகுப்புகளும், கல்லூரிகளும் திறக்க அரசு அனுமதி வழங்கி உள்ளது. அதன் படி அண்ணா பல்கலையின் இன்ஜினியரிங் கல்லுாரிகளில், நாளை முதல் இறுதியாண்டு மாணவர்களுக்கு மட்டும் நேரடி வகுப்புகள் நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. மற்ற மாணவர்களுக்கு, ஆன்லைன் வகுப்புகள் தொடரும் என்று பல்கலை நிர்வாகம் தெரிவித்து உள்ளது.

ஒரே நாளில் 9 நீதிபதிகள் பதவியேற்பு – உச்ச நீதிமன்ற வரலாற்றில் முதல்முறை!

மாணவர்களுக்கு முழுமையான விடுதி வசதி இருந்தால் மட்டுமே அனைத்து ஆண்டு மாணவர்களையும் அழைக்க முடியும். எனவே விடுதி வசதி திறந்த பின்னர் அனைத்து மாணவர்களையும் அழைக்கலாம் என, கல்லுாரிகளுக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது. இது குறித்து அண்ணா பல்கலை துணைவேந்தர் வேல்ராஜ் கூறுகையில், தமிழக அரசு அறிவிப்பின் படி, மாணவர்களின் உடல் நலன் மற்றும் பாதுகாப்புக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும். எனவே, தற்போதைய நிலையில் அண்ணா பல்கலையின் சென்னை வளாக கல்லுாரிகளான கிண்டி பொறியியல் கல்லூரி, அழகப்பா செட்டியார் தொழிநுட்ப கல்லூரி, கட்டட வடிவமைப்பியல் கல்லுாரி, குரோம்பேட்டை ஐ.ஐ.டி., ஆகியவற்றில், இளநிலை மற்றும் முதுநிலை படிப்பில், இறுதியாண்டு மாணவர்களுக்கு மட்டும், நாளை முதல் நேரடி வகுப்புகள் துவங்குகின்றன.

TN Job “FB  Group” Join Now

மேலும் சென்னையில் உள்ள அண்ணா பல்கலை வளாகம் மற்றும் கோவை, திருச்சி உள்ளிட்ட பிற இடங்களிலுள்ள அண்ணா பல்கலை வளாக கல்லுாரிகளிலும், விடுதிகள் திறக்கப்பட்டுள்ளன. எனவே கல்லூரிகளில் சமூக இடைவெளி பின்பற்றி அமர வைக்க வேண்டும். அதனால் முதல்கட்டமாக இந்த கல்லூரிகளில் இறுதியாண்டு மாணவர்கள் மட்டும் வர வைக்கப்பட்டுள்ளது, அடுத்து 10 நாட்களுக்குள் கல்லுாரிகளின் இட வசதி, விடுதி வசதிகளை பொறுத்து, ஒவ்வொரு ஆண்டு மாணவர்களுக்கும் படிப்படியாக நேரடி வகுப்புகள் துவங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அண்ணா பல்கலையின் மண்டல மற்றும் உறுப்பு கல்லுாரி முதல்வர்களும், தனியார் கல்லுாரி முதல்வர்களும், இடவசதிக்கு ஏற்ப, மற்ற ஆண்டு மாணவர்களை வரவழைக்க முடிவெடுக்கலாம் எனவும் அதுவரை மற்ற மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் தொடரப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!