5 ஆம் வகுப்பு முடித்தவர்க்கு காத்திருக்கும் கிராம உதவியாளர் வேலைவாய்ப்பு – தேர்வு கிடையாது!
திண்டுக்கல் மேற்கு வட்டம், சீலப்பாடி மற்றும் தெத்துப்பட்டியில் காலியாக உள்ள கிராம உதவியாளர் பதவிக்கு என பல்வேறு பணியிடங்கள் காலியாக உள்ளதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த தமிழக அரசு பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் 24.08.2022-ம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் | திண்டுக்கல் மேற்கு வட்டம் |
பணியின் பெயர் | கிராம உதவியாளர் |
பணியிடங்கள் | பல்வேறு |
விண்ணப்பிக்க கடைசி தேதி | 24.08.2022 |
விண்ணப்பிக்கும் முறை | ஆஃப்லைன் |
கிராம உதவியாளர் காலிப்பணியிடங்கள்:
1.சீலப்பாடி கிராமம்- BC (Other than Backward Class Muslims) Non- Priority – Tamil Medium
2.தெத்துப்பட்டி கிராமம் – ST – Priority – (Both Men and Woman) – Tamil Medium
வயது வரம்பு:
30.06.2022 தேதியின் படி, குறைந்த பட்சம் 21ஆண்டுகள், அதிகபட்சம் இதர பிரிவு/30-ம், பி.வ. /மி.பி.வ./32-ம், தா.வ./பழங்குடியினர்/37-ம் இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி:
விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் குறைந்த பட்சம் 5-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து, மேற்படி பதிவு நாளது தேதி வரை புதுப்பிக்கப்பட்டிருக்க வேண்டும். மிதிவண்டி ஓட்டத் தெரிந்திருக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை:
ஆர்வமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் பரிந்துரைக்கப்பட்ட விண்ணப்ப படிவத்தின் மூலம் ஆஃப்லைனில் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பதாரர் விண்ணப்பப் படிவத்துடன் தொடர்புடைய சுய-சான்றளிக்கப்பட்ட ஆவணங்களுடன் 24-ஆகஸ்ட்-2022 அன்று அல்லது அதற்கு முன் அறிவிப்பில் குறிப்பிடப்பட்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும். மேற்படி பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் அந்தந்த கிராமத்தைச் சேர்ந்தவராகவோ, அருகிலுள்ள கிராமத்தைச் சேர்ந்தவராகவோ இருக்க வேண்டும்.
Just dial
கலெக்டர் ஆபீஸ் டிரைவர்
89.keelnandhavankkadu kulithalai (TK) Karur (TD) nachalur (po) 6399110