PM Kisan திட்டத்தின் கீழ் ரூ.2000 நிதியுதவி வரவில்லையா? கவலை வேண்டாம்! புகார் அளிக்க எண்கள்!
PM கிசான் திட்டத்தின் கீழ் உதவித்தொகை, விவசாய மக்களின் வங்கிக் கணக்கில் செலுத்தப்படவில்லை என்றால், அதற்கான தீர்வு உடனடியாக கொடுக்கப்படும் என்றும், வங்கிக் கணக்கில் பணம் சேரவில்லை என்றாலோ அது சரி செய்யப்படும். இத்திட்டத்தின் பயனை ஒவ்வொரு விவசாயியும் பெற அரசு அனைத்து முயற்சிகளிலும் ஈடுபட்டுள்ளது என்றும் மத்திய விவசாய அமைச்சகம் தெரிவித்துள்ளது. இது குறித்த முழு விவரத்தை இப்பதிவில் பார்க்கலாம்.
புகார் அளிக்க எண்கள்:
இந்தியாவில் உள்ள சிறு குறு விவசாயிகளுக்கு பொருளாதார ரீதியாக உதவிடும் வகையில், பிரதம மந்திரியின் பி.எம். கிசான் சம்மான் நிதி திட்டத்தின் மூலம் ஆண்டுதோறும் 6,000 ரூபாய் வழங்கப்படுகிறது. இந்த தொகை மூன்று தவணையாக 2,000 ரூபாய் என பிரித்து நான்கு மாதத்திற்கு ஒரு முறை விவசாயிகளின் வங்கி கணக்கிலேயே செலுத்தப்படுகிறது. இதுவரை, 10 தவணைகள் செலுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், பிரதமர் கிசான் யோஜனா திட்டத்தின் 11வது தவணையை பிரதமர் நரேந்திர மோடி சமீபத்தில் வெளியிட்டார். இதன் மூலம் விவசாயிகளின் கணக்கில் 2000 ரூபாய் வரத் தொடங்கியுள்ளது.
Exams Daily Mobile App Download
இத்திட்டத்தின் கீழ் சுமார் 10 கோடி விவசாயிகளின் வங்கிக் கணக்கில் ரூபாய். 21,000 கோடி செலுத்தப்பட்டுள்ளது. ஆனால் சில காரணங்களால் சில விவசாய மக்களின் கணக்கிற்கு பணம் வந்து சேரவில்லை. அப்படி உங்கள் கணக்கிலும் பிரதமரின் கிசான் திட்ட 11 வது தவணை செலுத்தப்படவில்லை என்றால், நீங்கள் முதலில் உங்கள் பகுதியில் உள்ள கணக்காளர் மற்றும் வேளாண்மை அலுவலரை தொடர்பு கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள். அவர்கள் உங்களுக்கு பதிலளிக்கவில்லை எனில், நீங்கள் இத்திட்டத்திற்கான ஹெல்ப் – லைனை தொடர்பு கொள்ளலாம்.
இந்த ஹெல்ப் – லைன் (பி.எம்.கிசான் ஹெல்ப் டெஸ்க்) திங்கள் முதல் வெள்ளி வரை விவசாய மக்களுக்காக திறந்திருக்கும். இவை தவிர, [email protected] என்ற மின்னஞ்சல் அல்லது 011-23381092 (நேரடி ஹெல்ப்லைன்) என்கிற எண் வழியாகவும் தொடர்பு கொள்ளலாம்
- பிஎம் கிசான் இலவச எண்: 18001155266
- பிஎம் கிசான் ஹெல்ப்லைன் எண்:155261
- பிஎம் கிசான் லேண்ட்லைன் எண்கள்: 011—23381092, 23382401
- பிஎம் கிசான் புதிய ஹெல்ப் லைன்: 011-24300606
- பிஎம் கிசானுக்கு மற்றொரு ஹெல்ப்லைன்: 0120-6025109