மாவட்ட தொழில் மையத்தில் தமிழக அரசு வேலை – 8வது தேர்ச்சி போதும்..!
மயிலாடுதுறை மாவட்டத்தின் மாவட்ட தொழில் மையமானது தற்போது புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பில் Driver எனும் ஓட்டுநர் பணிக்கு என்று காலிப்பணியிடங்கள் இருப்பதாக தெரிவித்துள்ளது. இப்பணிக்கு தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் மட்டும் வரவேற்கப்படுகிறது. எனவே இப்பதிவை பயன்படுத்தி பணிக்கு தகுதியானவர்கள் மட்டும் உடனே விண்ணப்பித்து பயனடையுமாறு கேட்டுக் கொள்கிறோம்.
வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் | District Industries Centre Mayiladuthurai (DIC) |
பணியின் பெயர் | Driver |
பணியிடங்கள் | 01 |
விண்ணப்பிக்க கடைசி தேதி | 30.06.2022 |
விண்ணப்பிக்கும் முறை | Offline |
District Industries Centre பணியிடம்:
தற்போது வெளியான மயிலாடுதுறை மாவட்ட தொழில் மையத்தில் Driver பணிக்கு என்று ஒரு பணியிப்பிடம் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது.
Exams Daily Mobile App Download
DIC கல்வி தகுதி:
- இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் அவசியம் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையங்களில் கட்டாயம் 8 ம் வகுப்பில் தேர்ச்சி பெற்றவராக இருக்க வேண்டும்.
- மேலும் விண்ணப்பதாரர்கள் அவசியம் LMV ஓட்டுநர் உரிமம் வைத்திருக்க வேண்டும்.
District Industries Centre முன் அனுபவம்:
இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் இலகுரக வாகனங்கள் ஓட்டுவதில் குறைந்தது 2 ஆண்டுகள் முன் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
DIC வயது வரம்பு:
13.09.2022 அன்றைய நாளின் படி, 18 வயது நிரம்பியவர்கள் முதல் அதிகபட்ச வயதாக 34 வயதுக்கு (BC) உட்பட்டவராகவும் இருக்க வேண்டும். மேலும் SC, ST விண்ணப்பதாரர்களுக்கு 5 ஆண்டுகள் வயது தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளது.
District Industries Centre ஊதிய தொகை:
இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்பட்ட பின் பணியின் போது தகுதி மற்றும் திறனுக்கு ஏற்ப மாத ஊதியம் பெறுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
DIC தேர்வு செயல்முறை:
இப்பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் நேரடியாக நேர்காணல் (interview) மூலம் பணிக்கு தேர்வு செய்யப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
District Industries Centre விண்ணப்பிக்கும் முறை:
தமிழக அரசு பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள் மட்டும் உடனே இப்பதிவின் கீழுள்ள லிங்க் பயன்படுத்தி அதிகாரப்பூர்வ அறிவிப்பை பெற்று அதில் பரிந்துரைக்கப்பட்ட வண்ணம் விண்ணப்பங்களை தயார் செய்து, அத்துடன் தேவையான ஆவணங்களையும் இணைத்து 30.06.2022 அன்று 05.45 மணிக்குள் வரும்படி தபால் செய்ய வேண்டும்.