தமிழகத்தில் சீனியர் பட்டதாரி ஆசிரியர்களுக்கு DI பதவி? அரசுக்கு கோரிக்கை!
தமிழகத்தில் கடந்த ஆட்சி காலத்தில் டி.ஐ.கள் பதவியில் 90% ஜூனியர் ஆசிரியர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இப்பதவியில் சீனியர் பட்டதாரி ஆசிரியர்களை அரசு நியமிக்க வேண்டும் என்று ஆசிரியர்கள் எதிர்பார்த்து வருகின்றனர்.
சீனியர் ஆசிரியர்கள்:
தமிழகத்தில் கொரோனா நோய் பரவல் சூழலை கருத்தில் கொண்டு பள்ளி மற்றும் கல்லூரிகளில் நேரடி வகுப்புக்கான தடை தொடர்ந்து நீட்டிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை பணிகள் நடைபெற்று வருகிறது. இதனால் தமிழகத்தில் இன்னும் சில வாரத்தில் பள்ளிகள் திறக்கப்படும் என்று கூறப்பட்டு வருகிறது. இந்நிலையில் தமிழக அரசு பள்ளி ஆசிரியர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு ஒன்று எழுந்துள்ளது.
வங்கி கணக்கு வைத்திருப்பவர்கள் கவனத்திற்கு – சைபர் கிரைம் அறிவுறுத்தல்!
இது குறித்து ஆசிரியர்கள் கூறுகையில். மாநிலம் முழுவதும் 120 மாவட்ட கல்வி அலுவலகங்களில் டி.ஐ.கள் அந்தஸ்தில் பட்டதாரி ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் அரசு மற்றும் உதவி பெறும் பள்ளிகளில் 6, 7, 8ம் வகுப்பு ஆசிரியர்களின் கற்பித்தல் திறன், பள்ளி ஆண்டாய்வு போன்ற சான்றிதழ்களின் உண்மைத்தன்மை உள்ளிட்ட ஆய்வுகளில் ஈடுபடுவர். இந்நிலையில் கடந்த ஆட்சி காலத்தில் மாவட்ட கல்வி அலுவலகங்களில் டி.ஐ.கள் பதவியில் ஜூனியர் பட்டதாரிகள் அமர்த்தப்பட்டுள்ளனர்.
TN Job “FB Group” Join Now
அரசியல் பின்னணியில் சுமார் 90% ஜூனியர் பட்டதாரிகள் இப்பதவியை கைப்பற்றியுள்ளனர். இதனால் ஜூனியர் நிலையில் உள்ள ஆசிரியர்களால் சீனியர் ஆசிரியர்கள் திறனை ஆய்வு செய்வதில் பல மாவட்டங்களில் ஈகோ சர்ச்சை ஏற்படுகிறது. எனவே இதை தவிர்க்கும் வகையில் தகுதியுள்ள சீனியர் ஆசிரியர்களை இப்பதவியில் நியமிக்க கமிஷனர் நந்தகுமார் அவர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர்.