அரசு ஆரம்ப சுகாதார நிலைய வேலைவாய்ப்பு 2023 – 63 காலிப்பணியிடங்கள்!
நீலகிரி மாவட்டத்தில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் நகர அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் காலியாக உள்ள 63 செவிலியர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது. இந்த அறிவிப்பின் படி, ஒப்பந்த அடிப்படையில் இப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. எனவே ஆர்வமுள்ளவர்கள் 27.01.2023-க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் | அரசு ஆரம்ப சுகாதார நிலையம் |
பணியின் பெயர் | செவிலியர் |
பணியிடங்கள் | 63 |
விண்ணப்பிக்க கடைசி தேதி | 27.01.2023 |
விண்ணப்பிக்கும் முறை | Offline |
நீலகிரி மாவட்ட காலிப்பணியிடங்கள்:
செவிலியர் பதவிக்கு என 63 பணியிடங்கள் காலியாக உள்ளன.
செவிலியர் வயது வரம்பு:
விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் வயதானது அதிகபட்சம் 50 க்குள் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.
பேங்க் ஆப் பரோடா வங்கியில் ரூ.40,000/- ஊதியத்தில் வேலை – உடனே விண்ணப்பியுங்கள்!!
கல்வி தகுதி:
DHS அதிகாரப்பூர்வ அறிவிப்பின்படி விண்ணப்பதாரர் அங்கீகரிக்கப்பட்ட வாரியங்கள் அல்லது பல்கலைக்கழகங்களில் ஏதேனும் ஒன்றில் DGNM, B.Sc நர்சிங் முடித்திருக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை:
ஆர்வமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் பரிந்துரைக்கப்பட்ட விண்ணப்ப படிவத்தின் மூலம் ஆஃப்லைனில் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பதாரர் விண்ணப்பப் படிவத்தை உரிய சுய சான்றொப்பமிடப்பட்ட ஆவணங்களுடன் பூர்த்தி செய்து 27.01.2023 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.