CSK கேப்டன் ‘தல’ தோனி உடன் இணைந்த நடிகர் விக்ரம் – திடீர் சந்திப்பு! வைரலாகும் புகைப்படம்!
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகரான விக்ரம் நேற்று இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தற்போதைய கேப்டனுமான எம்.எஸ்.தோனியை திடீரென சந்தித்தார். இவர்கள் இருவரும் இணைந்து எடுத்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
வைரலாகும் புகைப்படம்:
ஐபிஎல் 2022க்கான மெகா ஏலம் இம்மாதம் 12ம் தேதி தொடங்க உள்ள நிலையில் இந்திய அணியின் பார்மல் கேப்டனும் தற்போதைய CSK அணி கேப்டனுமாகிய மகேந்திர சிங் தோனி ஜனவரி 28 ஆம் தேதி சென்னை வந்தடைந்தார். இதை தொடர்ந்து அடுத்த 10 ஆண்டுகளை மனதில் வைத்து அதற்கான அணியை மெகா ஏலத்தில் எடுக்கும் படி CSK அணி ஆலோசனை கூட்டம் நடத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது . சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தோனி மற்றும் CSK ஹெட் கோச் பிளெமிங் ஆகியோர் ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொள்ள உள்ளன. இதனால் அதிக இளம் வீரர்களை அணியில் எடுக்க CSK அணி திட்டம் போட்டுள்ளது.
நெல்லை சாப்டர் பள்ளி திறப்பு தள்ளிவைப்பு – கல்வித்துறை முக்கிய அறிவிப்பு!
நேற்று MS தோனி, கோலிவுட்டின் சிறந்த நடிகராகிய சியான் விக்ரமைச் சந்தித்தார். இருவரின் இந்த திடீர் சந்திப்பு தமிழ் ரசிகர்களிடம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஐபிஎல் மெகா ஏலத்திற்காக தற்போது சென்னையில் இருக்கும் இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் தோனியை சியான் விக்ரம் சந்தித்தது திடீரென அமைந்தது என்றும் அதற்கு வேறு காரணங்கள் எதுவும் இல்லை என்றும் சினிமா வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இதற்கு முன் கேப்டன் கூல் தோனி கடந்த ஆண்டு ஆகஸ்ட் 12, 2021 அன்று ஸ்ரீ கோகுலத்தில் படப்பிடிப்பில் இருந்தபோது தளபதி விஜய்யை சந்தித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் வயது 62 ஆக உயர்வு – அரசாணை வெளியீடு!
தற்போது மகான் படத்தில் நடித்து முடித்துள்ளார் விக்ரம். இப்படத்தை கார்த்திக் சுப்புராஜ் இயக்கி உள்ளார். இப்படத்தில் நடிகர் விக்ரமுடன் அவரது மகன் துருவ்வும் இணைந்து நடித்துள்ளார். இப்படம் வருகிற பிப்ரவரி 10-ந் தேதி நேரடியாக ஓடிடி தளத்தில் ரிலீசாக உள்ளது. நேற்று மஹான் பட செய்தியாளர் சந்திப்புக்காக விக்ரம் சென்னை ஸ்டுடியோஸ் வந்துள்ளார் அதே நேரத்தில் மகேந்திர சிங் ஒரு விளம்பர படப்பிடிப்புக்காக அங்கு வந்தார். இருவரும் தற்செயலாக சந்தித்தனர். இவர்கள் இணைந்து எடுக்க எடுத்த புகைப்படங்களை இணையவாசிகள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக்கி வருகின்றனர்.