தமிழக காவலர்களுக்கு முக்கிய அறிவிப்பு – டிஜிபி சைலேந்திர பாபு உத்தரவு!
தமிழக காவலர்கள் தங்களது சொந்த பணிகளுக்காக பேருந்துகளில் பயணம் செய்தால் கட்டணம் செலுத்தி கண்டிப்பாக டிக்கெட் எடுக்க வேண்டும் என டிஜிபி சைலேந்திர பாபு உத்தரவிட்டுள்ளார்.
காவலர்களுக்கு அறிவிப்பு:
தமிழ்நாடு காவல்துறையின் புதிய தலைமை இயக்குநராக சி.சைலேந்திர பாபு ஜூலை 1ஆம் தேதி நியமனம் செய்யப்பட்டார். ஏற்கனவே இவர் ரயில்வே பிரிவு டிஜிபி ஆக பணியாற்றி வந்தவர். காவல்துறையில் பல்வேறு பதவிகளையும், குடியரசுத் தலைவர் பதக்கம், உயிர்காப்பு நடவடிக்கைக்கான பிரதமரின் பதக்கம், வீரதீர செயல்களுக்கான முதல்வர் பதக்கம் உள்ளிட்டவற்றை பெற்றவர். ஐபிஎல் மட்டுமின்றி எம்.எஸ்.சி, எம்.பி.ஏ, பி.ஹெச்.டியையும், சைபர் கிரைம் ஆய்வுப் படிப்பையும் முடித்தவர்.
சமஸ்கிருத ஆசிரியர்களுக்கு அதிக அளவிலான வேலைவாய்ப்பு – உபி அரசு அறிவிப்பு!
இவர் குற்றச் செயல்களுக்கு எதிராக தீவிரமாக நடவடிக்கை எடுக்க கூடியவர் என்று பெயர் பெற்ற அதிகாரி ஆகும். எனவே டிஜிபியாக பதவி ஏற்றது முதல் அதிரடி நடவடிக்கைகளை தொடங்குவார் எதிர்பார்ப்பு இருந்தது. இந்நிலையில் அவர் பதவி ஏற்ற பின்னர் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். தற்போது காவல்துறை பணியாளர்களுக்கு முக்கிய உத்தரவு ஒன்றை அறிவித்துள்ளார்.
TN Job “FB Group” Join Now
அதில் காவல்துறையினர் அரசு பேருந்துகளில், கைதிகளை அழைத்துச் செல்லுதல் அல்லது வாரண்ட் தொடர்பான பணிகள் உள்பட துறை சார்ந்த பணிகள் தவிர்த்து மற்ற சொந்த தேவைக்காக பயணம் செய்யும் போது கண்டிப்பாக டிக்கெட் எடுக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளார். மேலும் விதிமுறைகளை பின்பற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் டிஜிபி சைலேந்திர பாபு தெரிவித்துள்ளார்.