லிங்கை கிளிக் செய்தால் வரும் ஆபத்து – டிஜிபி சைலேந்திரபாபு எச்சரிகை!
தமிழக டிஜிபி சைலேந்திரபாபு அவர்கள், சைபர் கிரைம் தொடர்பான திருட்டு செயல்கள் குறித்து மக்களுக்கு எச்சரிக்கை அளிக்கும் வகையிலான தகவல்களை அளித்துள்ளார்.
சைபர் திருட்டு:
கடந்த சில வருடங்களுக்கு முன்பு வரை டிஜிட்டல் முறையிலான பணப்பரிமாற்றம், தகவல் பரிமாற்றங்கள் போன்றவை மிகவும் குறைவான அளவிலேயே பயன்பாட்டில் இருந்தது. கொரோனா காலத்தின் போது மத்திய மற்றும் மாநில அரசுகள் பொதுமக்கள் வெளி இடங்களுக்கு செல்வதற்கு தடை விதித்திருந்த நிலையில் அப்பொழுது நிலவிய ஊரடங்கு காலத்தில் தான் டிஜிட்டல் முறையிலான செயல்பாடுகள் அதிக அளவில் மக்கள் மத்தியில் பயன்பாட்டிற்கு வந்தது.
சென்னையில் போக்குவரத்து நெரிசல் – மேம்பாலம் அமைக்க திட்டம்.. விரைவில் பணிகள் துவக்கம்!
Follow our Instagram for more Latest Updates
இதனை தொடர்ந்து டிஜிட்டல் முறையிலான சைபர் குற்றங்கள் அதிக அளவில் பதிவு செய்யப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. இது தொடர்பாக அரசு பல முறை மக்களுக்கு எச்சரிக்கை செய்துள்ளது. இந்நிலையில், தமிழக டிஜிபி சைலேந்திரபாபு அவர்கள், யாரேனும் லிங்கை அனுப்பி அதனை கிளிக் செய்ய சொன்னால், அதில் ஆபத்து இருக்கிறது என்று அர்த்தம், இது போன்ற விஷயங்களை தவிர்த்து விடுங்கள் என்று சென்னை எத்திராஜ் மகளிர் கல்லூரியில் நடந்த விழாவில் பேசியுள்ளார்.