TNUSRB 2ம் நிலை காவலர் PET தேர்வுக்கு ‘இது’ கட்டாயம் – டிஜிஜி அறிவிப்பு!
தமிழகத்தில் 2ம் நிலை காவலர்களுக்கான உடல் தகுதித்தேர்வு வரும் ஜூலை 26 முதல் ஆகஸ்ட் 3ம் தேதி வரை விழுப்புரம் ஆயுதப்படை மைதானத்தில் நடைபெற உள்ளது. தேர்வர்கள் 4 நாட்களுக்கு முன்பு செய்து கொண்ட கொரோனா பரிசோதனை சான்றை கட்டாயம் கொண்டு வர வேண்டும் என டிஜிஜி தெரிவித்துள்ளார்.
காவலர் உடல் தகுதித்தேர்வு:
காவலர், சிறைக்காவலர்கள், தீயணைப்பு வீரர்கள் போன்றவர்கள் அரசு பணிகளுக்கு TNUSRB வாரியத்தின் எழுத்துத் தேர்வு மற்றும் உடற்கூறு தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுகிறார்கள். இந்த எழுத்துத் தேர்வு கடந்தாண்டு நடைபெற்றது. இதில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு அடுத்தகட்ட தேர்வாக உடல் தகுதித்தேர்வு வரும் ஜூலை 26ம் தேதிக்கு தொடங்கவுள்ளது. இந்த தேர்வானது விழுப்புரம், காகுப்பம் ஆயுதப்படை மைதானத்தில் வரும் ஆகஸ்ட் 3ம் தேதி வரை நடைபெறும் என தமிழ்நாடு சீருடை பணியாளர் குழுமம் தெரிவித்துள்ளது. இந்த உடல் தகுதித்தேர்வில் விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களைச் சேர்ந்த தேர்ச்சி பெற்ற ஆண்கள், பெண்கள் பங்கேற்கயுள்ளனர்.
Mastercard நிறுவன Debit, Credit கார்டுகள் வழங்க இன்று முதல் தடை – RBI அறிவிப்பு!
உடல் தகுதித்தேர்வுக்கு அழைப்பு கடிதத்தில் குறிப்பிட்டுள்ள தேதி மற்றும் சரியான நேரத்தில் ஆஜராக வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் தமிழகம் முழுவதும் கொரோனா தொற்று வேகமெடுப்பதால் தேர்வர்கள் 4 நாட்களுக்கு முன்பு செய்து கொண்ட கொரோனா பரிசோதனை சான்றை கட்டாயம் கொண்டு வர வேண்டும். நெகட்டிவ் சான்று இல்லையெனில் தேர்வர்களுக்கு அனுமதி கிடையாது எனவும், அரசின் கொரோனா தடுப்பு விதிமுறைகளையும் பின்பற்ற வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. தேர்வு நடைபெறும் களத்தில் 300 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
TN Job “FB Group” Join Now
தினமும் காலை 6:00 மணி முதல் 9:00 வரை 300 தேர்வர்களும், 9:00 மணிக்கு மேல் 200 தேர்வர்களின் சான்றிதழ் சரிபார்க்கப்பட்டு உடற்கூறு தகுதிகள் மதிப்பிடப்படும் என்று கூறப்பட்டுள்ளது. முக்கிய அறிவிப்பாக தேர்வு நடைபெறும் இடத்திற்கு அருகிலோ அல்லது வேறு இடத்திலோ சிபாரிசு மூலம் பணி வாங்கித் தருவதாக வெளிநபர்கள் கூறினால் யாரும் நம்ப வேண்டாம். இந்த உடல் தகுதித்தேர்வு தகுதி அடிப்படையில் CCTV மூலம் கண்காணித்து நடைபெறும் தேர்வாகும். திறமையும், தகுதியும் உள்ளவர்கள் மட்டுமே தேர்வு செய்யப்படுவார்கள் என டி.ஐ.ஜி.பாண்டியன் தெரிவித்துள்ளார்.