நாடு முழுவதும் செப்.30 வரை போக்குவரத்துக்கு தடை நீட்டிப்பு – DGCA உத்தரவு!

0
நாடு முழுவதும் செப்.30 வரை போக்குவரத்துக்கு தடை நீட்டிப்பு - DGCA உத்தரவு!
நாடு முழுவதும் செப்.30 வரை போக்குவரத்துக்கு தடை நீட்டிப்பு - DGCA உத்தரவு!
நாடு முழுவதும் செப்.30 வரை போக்குவரத்துக்கு தடை நீட்டிப்பு – DGCA உத்தரவு!

கொரோனா நோய்த்தொற்று நிலவரத்தை கருத்தில் கொண்டு இந்தியாவில் சர்வதேச விமான போக்குவரத்திற்கான தடை வருகிற செப்டம்பர் 30ம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக DGCA அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.

விமான தடை:

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தொற்று பரவல் காரணமாக பல்வேறு கட்டுப்பாடுகள் அமலில் உள்ளது. தற்போது 2வது அலை பாதிப்பு இறுதிக்கட்டத்தை எட்டி வரும் நிலையில், பொதுப்போக்குவரத்திற்கான தளர்வுகளில் கவனம் தேவை என அறிவுறுத்தப்பட்டு வருகிறது. முதல் அலையின் போது வெளினாய்ட்ல் உள்ள இந்தியர்கள் நாடு திரும்ப வந்தே பாரத் எனும் விமான சேவை திட்டம் செயல்படுத்தப்பட்டது. இதனால் ஏராளமானோர் தாயகம் திரும்பினர். இந்நிலையில் வெளிநாட்டில் இருந்து இந்தியா வருவதற்கும் பல்வேறு நடைமுறைகள் உள்ளன. மேலும் சர்வதேச பயணிகள் விமான போக்குவரத்திற்கும் தடை அமலில் உள்ளது.

தமிழகத்தில் செப்.1 முதல் பள்ளிகள் திறப்பு – முதல்வர் இன்று ஆலோசனை!

தற்போது அது மேலும் ஒரு மாத காலம் நீட்டிக்கப்பட்டு உள்ளது. அதாவது சர்வதேச திட்டமிடப்பட்ட வணிக விமானங்களுக்கான இடைநீக்கம் செப்டம்பர் 30 வரை DGCA ஆல் நீட்டிக்கப்பட்டுள்ளது. மேலும் சர்வதேச சரக்கு விமானங்களையும், கட்டுப்பாட்டாளரால் அங்கீகரிக்கப்பட்ட விமானங்களையும் தொடர்ந்து இயங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி தேர்ந்தெடுக்கப்பட்ட வழித்தடங்களில் திட்டமிடப்பட்ட சர்வதேச விமானங்கள் அனுமதிக்கப்படலாம் என்றும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்று முதல் இரவு நேர ஊரடங்கு அமல் – கொரோனா பரவல் எதிரொலி!

கொரோனா தொற்று பரவுவதை தடுக்க இந்திய அரசு மார்ச் 23, 2020 முதல் சர்வதேச வணிக விமானங்களை தடை செய்தது. இருப்பினும் அமெரிக்கா, இங்கிலாந்து, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், மாலத்தீவு, நெதர்லாந்து, பிரான்ஸ், ஜெர்மனி, கத்தார் மற்றும் பூட்டான் உட்பட சுமார் 25 நாடுகளுடன் இந்தியா ஒப்பந்தமிட்டு விமானங்களுக்கு அனுமதி அளித்துள்ளது. ஆகஸ்ட் 31 ஆம் தேதி சர்வதேச வர்த்தக விமானங்களுக்கான கட்டுப்பாடுகளை நீக்குவது குறித்து இந்தியா பரிசீலித்து வந்தது. இருப்பினும், பல நாடுகளில் தொற்றுநோயின் மூன்றாவது அலை மற்றும் டெல்டா மாறுபாடு பரவல் அதிகரித்து வரும் அச்சுறுத்தலை எதிர்கொண்டு தடை நீட்டிக்கப்பட்டு வருகிறது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!