Go First விமான நிர்வாகத்திற்கு ரூ.10 லட்சம் அபராதம் விதிப்பு – டிஜிசிஏ நடவடிக்கை!
பெங்களூரு விமான நிலையத்தில் கோ ஃபர்ஸ்ட் விமானத்தில் ஏறுவதற்காக காத்திருந்த 55 பயணிகளை முறையான வழிகாட்டுதல் இல்லாமல் விட்டு சென்றதாக அந்த நிறுவனத்திற்கு ரூ.10 லட்சம் அபராதம் விதித்து டிஜிசிஏ உத்தரவிட்டுள்ளது.
அபராதம் விதிப்பு:
தில்லி மற்றும் மும்பை விமான நிலையங்களுக்கு அடுத்தபடியாக அதிகம் பயணிகளை சந்திக்கும் விமான நிலையமாக பெங்களூரு கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையம் இருக்கிறது. இந்த விமான நிலையத்தில் கடந்த ஜனவரி மாதம் 9ஆம் தேதி காலை 6:30 மணிக்கு டெல்லி செல்லும் கோ ஃபர்ஸ்ட் விமானத்தில் 55 ஏர்லைன்ஸ் பயணிகள் காத்திருந்தனர். அப்போது அவர்களுக்கு முறையான வழிகாட்டுதல் இல்லாமல் தவிக்கவிட்டு சென்றதாக குற்றசாட்டு எழுந்துள்ளது.
இந்த புகாரை தொடர்ந்து விமானப் போக்குவரத்து கண்காணிப்பு குழுவான டிஜிசிஏ விமான நிறுவனத்திற்கு ரூ.10 லட்சம் அபராதம் விதித்துள்ளது. மேலும் விமான நிறுவனத்திற்கு ஒரு ஷோ-காஸ் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அந்த நோட்டீஸிற்கு பதில் அளித்த விமான நிறுவனம், கோ ஃபர்ஸ்ட் விமானத்தில் பயணிகளை ஏற்றிச் செல்வது தொடர்பாக டெர்மினல் ஒருங்கிணைப்பாளர், வணிக ஊழியர்கள் மற்றும் பணியாளர்களிடையே முறையற்ற தகவல் தொடர்பு, ஒருங்கிணைப்பு இல்லாமல் இருந்ததாக விளக்கம் கொடுத்துள்ளது.
வங்கி ஊழியர்களின் வேலை நிறுத்தம் அறிவிப்பு தள்ளி வைப்பு – வெளியான அப்டேட்!
இந்நிலையில் டிஜிசிஏ வெளியிட்ட அறிக்கையில், பயணிகளை கையாளுதல், சுமை மற்றும் டிரிம் ஷீட் தயாரித்தல், விமானத்தை அனுப்புதல் மற்றும் பயணிகள்/சரக்கு கையாளுதல் ஆகியவற்றிற்கு போதுமான ஏற்பாட்டை உறுதி செய்ய விமான நிறுவனம் தவறிவிட்டது என குற்றம்சாட்டி இந்த தவறுக்காக கோ ஃபர்ஸ்ட் விமான நிர்வாகம் ரூ.10 லட்சம் அபராதம் செலுத்த வேண்டும் என தெரிவித்துள்ளது.