DFCCIL நிறுவனத்தில் பட்டதாரிகளுக்கான வேலைவாய்ப்பு – நேர்காணல் மட்டுமே..!
அர்ப்பணிக்கப்பட்ட சரக்கு காரிடார் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட் ஆனது கடந்த சில நாட்களுக்கு முன் வெளியிட்ட வேலைவாய்ப்பு அறிவிப்பில், SAP Consultant பணிக்கு என்று ஆள் நிரப்ப திட்டமிட்டதாக தெரிவித்திருந்தது. தற்போது இப்பணிக்கு காலிப்பணியிடங்கள் நிரப்ப இருப்பதால், இப்பணி குறித்து முழு விவரங்களையும் இப்பதிவில் வழங்கியுள்ளோம். எனவே இப்பணிக்கு தகுதியும் ஆர்வமும் நிறைந்த நபர்கள் இப்பதிவின் மூலம் விண்ணப்பித்து பயனடையலாம்.
DFCCIL வேலைவாய்ப்பு விவரங்கள்:
- SAP Consultant பணிக்கு Team Lead பிரிவில் 01 பணியிடம், IT-FI / CO பிரிவில் 02 பணியிடம், IT – PS பிரிவில் 01 பணியிடம், IT – MM பிரிவில் 01 பணியிடம் மற்றும் IT-HCM – PR பிரிவில் 01 பணியிடம் என மொத்தமாக 06 காலிப்பணியிடங்கள் மட்டும் நிரப்ப திட்டமிட்டுள்ளது.
- SAP Consultant பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர் அரசு அல்லது அரசு அனுமதி பெற்ற கல்லூரி / பல்கலைக்கழகங்களில் பணிக்கு தொடர்புடைய பாடப்பிரிவில் கட்டாயம் MBA, B.E., B.Tech, CA, ICWA, MCA அல்லது Bachelor Degree-களில் ஏதேனும் ஒன்றை முடித்திருக்க வேண்டும்.
TN Job “FB Group” Join Now
- SAP Consultant பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர் குறைந்தது 2 ஆண்டுகள் முதல் 6 ஆண்டுகள் வரை பணி சார்ந்த துறைகளில் அனுபவம் வைத்திருக்க வேண்டும்.
- இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர் குறைந்தபட்சம் 20 வயது முதல் அதிகபட்சம் 50 வயதுக்கு இடைப்பட்டவராக இருப்பது அவசியமாகும்.
- SAP Consultant / Team Lead பணிக்கு தேர்வு செய்யப்பட்டவர்கள் ரூ.2,00,000/- வரை மாத ஊதியம் பெறுவார்கள் என்றும் SAP Consultant பணிக்கு தேர்வு செய்யப்பட்டவர்கள் ரூ.1,50,000/- வரை மாத ஊதியம் பெறுவார்கள் என்றும் குறிப்பிட்டுள்ளது.
- இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர் 21.04.2022 அன்று 09:45 மணி முதல் 10:30 மணி வரை நடைபெறும் நேர்முகத் தேர்வின் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.
தமிழக அரசின் மின் துறையில் 10வது முடித்தவர்களுக்கு வேலைவாய்ப்பு – ஆண்களுக்கு முன்னுரிமை..!
DFCCIL விண்ணப்பிக்கும் முறை:
விண்ணப்பிக்க தகுதியும் ஆர்வமும் நிறைந்த நபர்கள் இப்பதிவின் இறுதியில் கொடுக்கப்பட்டுள்ள இணைப்பின் மூலம் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்த பின், அதை பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களை இணைத்து 21.04.2022 அன்று நேர்முகத் தேர்வுக்கு வரும் போது நேரில் கொண்டு வந்து கலந்து கொள்ள கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். மேலும் நேர்காணலுக்கு இன்னும் 2 நாட்கள் உள்ள நிலையில் தேவையான ஆவணங்களை அதற்குள் தயார் செய்து கொள்ள அறிவுறுத்துகிறோம்.