DFCCIL நிறுவனத்தில் தேர்வில்லாத வேலைவாய்ப்பு – நாளைக்குள் விண்ணப்பிக்கவும்..!
பிரத்யேக சரக்கு காரிடார் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா (DFCCIL) வெளியிட்ட அறிவிப்பில் காலியாக உள்ள பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. Manager, Assistant Manager, Jr. Manager (Law) ஆகிய பணிகளுக்கான இடங்கள் காலியாக இருப்பதாக இந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க விருப்பம் உள்ள விண்ணப்பதாரர்கள் இன்றே விண்ணப்பித்து பயன் அடையவும். கல்வி, வயது, விண்ணப்பிக்கும் முறை போன்ற பணி குறித்த அனைத்து தகவல்களும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
DFCCIL வேலைவாய்ப்பு விவரங்கள்:
தற்போது வெளியான அறிவிப்பில், பிரத்யேக சரக்கு காரிடார் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியாவில் (DFCCIL) காலியாக உள்ள Manager, Assistant Manager, Jr. Manager (Law) பணிகளுக்கு என 02 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பில் Manager பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் மத்திய / மாநில அரசு அலுவலகங்களில் Group B பதவிகளில் குறைந்தது 4 ஆண்டுகள் Rs. 60000-180000 (lDA) (E3) கிரேடுகளில் பணிபுரியும் அதிகாரியாகவும், Assistant Manager பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் மத்திய / மாநில அரசு அலுவலகங்களில் Group B பதவிகளில் குறைந்தது 4 ஆண்டுகள் Rs. 50000-160000 (lDA) (E2) கிரேடுகளில் பணிபுரியும் அதிகாரியாகவும், Jr. Manager பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் மத்திய / மாநில அரசு அலுவலகங்களில் Group B பதவிகளில் குறைந்தது 4 ஆண்டுகள் Rs.40000-140000 (lDA) (El) கிரேடுகளில் பணிபுரியும் அதிகாரிகள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
Join Our TNPSC Coaching Center
விண்ணப்பதாரர்கள் அதிகபட்சம் 55 வயதுக்குள் உள்ளவராக இருந்தால் மட்டுமே இப்பணிக்கு விண்ணப்பிக்க முடியும். இப்பணிக்கு தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படும் விண்ணப்பதாரர்கள் Parent pay மற்றும் Deputation allowance ஆகியவை மத்திய அரசின் ஊதிய விதிமுறைப்படி, ஊதியம் பெறுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. Manager, Assistant Manager, Jr. Manager (Law) பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் Deputation முறையில் தேர்வு செய்யப்படுவார்கள்.
Exams Daily Mobile App Download
இந்த மத்திய அரசு பணிக்கு விண்ணப்பிக்க விருப்பம் மற்றும் தகுதி உள்ள நபர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பின் கீழ் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து அதை பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ்களின் நகலை இணைத்து அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு தபால் செய்ய வேண்டும். இப்பணிக்கு விண்ணப்பிக்க இன்னும் ஒரு நாள் (26.05.2022) மட்டுமே கால அவகாசம் உள்ளதால் விண்ணப்பதாரர்கள் இந்த நொடியே விண்ணப்பித்து பயன் பெறுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.