ரயில்வே துறையில் தேர்வில்லா வேலைவாய்ப்பு – விண்ணப்பிக்கலாம் வாங்க..!
பிரத்யேக சரக்கு காரிடார் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா (DFCCIL) நிறுவனம் ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை சமீபத்தில் வெளியிட்டது. இதில் காலியாக உள்ள General Manager (cord) பணிக்கான பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதிகள் குறித்த முழு விவரங்களும் கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது. ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
வேலைவாய்ப்பு விவரங்கள்:
- வெளியிடப்பட்ட அறிவிப்பில் General Manager பணிக்கு என்று தற்போது ஒரு பணியிடம் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.
- General Manager பணிக்கு விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையங்களில் பணிக்கு தொடர்புடைய பாடப்பிரிவில் கட்டாயம் ஏதேனும் ஒரு டிகிரி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
- மேலும் விண்ணப்பதாரர்கள் மத்திய அல்லது மாநில அரசில் பணிக்கு சம்பந்தப்பட்ட பிரிவு ஒத்த பதவிகளில் Level-14 / Level-13 பதவியில் குறைந்தது 17 ஆண்டுகள் Group A பிரிவில் பணிபுரிந்த அனுபவம் வைத்திருக்க வேண்டும்.
- 25.06.2022 அன்றைய நாளின் படி, விண்ணப்பதாரர்களுக்கு அதிகபட்ச வயது வரம்பாக 55 வயது நிர்ணயிக்கப்பட்டுள்ளது. எனவே விண்ணப்பதாரர்கள் கட்டாயம் 55 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.
- இப்பணிக்கு தேர்வு செய்யப்படும் நபர்கள் தகுதி மற்றும் திறன் பொறுத்து மாதம் Parent pay மற்றும் இத்துடன் Deputation allowance பெறுவார்கள் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
- இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் நேரடியாக Deputation முறையில் பணிக்கு தேர்வு செய்யப்பட உள்ளார்கள்.
விண்ணப்பிக்கும் முறை:
ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து 25.06.2022ம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்பட்டிருந்தது. தற்போது அதற்கான கால அவகாசம் நாளையுடன் முடிய உள்ளதால் விண்ணப்பதாரர்கள் விரைந்து விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.