ஆடி அமாவாசை முன்னிட்டு அனைத்து கோயில்களிலும் நாளை பக்தர்கள் தரிசனம் செய்ய தடை!!
இந்துக்களின் முக்கிய வழிபாட்டு தினமான ஆடி அமாவாசை சிறப்பு நாளை முன்னிட்டு, ஆகஸ்ட் 8 ஆம் தேதி இந்து அறநிலையத்துறைக்கு சொந்தமான அனைத்து கோவில்களிலும் பக்தர்களின் தரிசனத்துக்கு தடை விதித்து உத்தரவிடப்பட்டுள்ளது.
பக்தர்களுக்கு தடை
தமிழகத்தில் தற்போது ஆகஸ்ட் 23 ஆம் தேதி வரை கட்டுப்பாடுகளுடன் கூடிய முழு ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த பொது முடக்க காலத்தில் மக்கள் அதிகம் கூடும் கடைகளை அடைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் வார நாட்களில் வெள்ளி, சனி, ஞாயிறு உள்ளிட்ட கிழமைகளில் மத வழிபாட்டு தலங்களை முழுமையாக மூட வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய கட்டுப்பாடுகள் அனைத்தும் ஆகஸ்ட் 9 ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.
ரேஷன் கடைகளில் இல்லத்தரசிகளுக்கு 1000 ரூபாய்? முதல்வர் இன்று அதிகாரப்பூர்வ அறிவிப்பு!!
இதனிடையே இந்துக்களின் வழிபாட்டு தினமான, ஆடி அமாவாசை சிறப்பு பூஜைகள் நாளை (ஆகஸ்ட் 8) நடைபெற உள்ளது. இந்த தரிசனங்களில் கலந்து கொள்ள பக்தர்களுக்கு தடை விதித்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதாவது ஒவ்வொரு ஆண்டும் இந்து திருக்கோவில்களில் ஆடி அமாவாசை நாளில் சிறப்பு பூஜைகள் நடத்தப்படுவது வழக்கம். அந்த தினங்களில் சிறப்பு தரிசனத்துக்காக அதிகமான பக்தர்கள் கூட்டம் கோவில்களுக்கு வருவது உண்டு.
TN Job “FB Group” Join Now
ஆனால் இந்த ஆண்டு கொரோனா பரவல் காரணமாக பல்வேறு நடவடிக்கைகளுக்கு கடும் கட்டுப்பாடுகளை அரசு விதித்து வருவதன் மத்தியில், ஆடி அமாவாசையான நாளன்று பக்தர்களின் தரிசனத்துக்கு தடை செய்யப்பட்டுள்ளது. அந்த வகையில் தமிழகத்தில் இந்து அறநிலையத்துறைக்கு சொந்தமான அனைத்து கோயில்களிலும் நாளை (ஆகஸ்ட் 8) ஆடி அமாவாசை மற்றும் ஆகஸ்ட் 11 ஆம் தேதியன்று ஆடிப்பூரம் உள்ளிட்ட நாட்களில் நடைபெறும் பூஜைகளில் பக்தர்கள் கலந்து கொள்ள தடை விதிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் திருக்கோவில்களில் வழக்கம் போல பூஜைகள் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.