திருப்பதி செல்ல திட்டமிடும் பக்தர்கள் கவனத்திற்கு – ‘இதற்கு’ இன்னும் 28 நாட்கள் தான்!
ஆந்திர மாநிலம் திருப்பதி திருமலையில் உள்ள ஏழுமலையான் திருக்கோவிலில் கடந்த 2 ஆண்டுகளுக்கு பிறகு பிரம்மாண்டமாக வருடாந்திர பிரம்மோற்சவ விழா வருகிற செப்டம்பர் 27ம் தேதி அன்று நடைபெற உள்ளது. இத்திருவிழாவை மிகவும் சிறப்பாக கொண்டாட தேவஸ்தானம் திட்டமிட்டுள்ளது.
திருப்பதி பக்தர்கள்
ஆந்திர மாநிலத்தில் உள்ள திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க வெளிநாடுகளில் இருந்தும் வெளியூர்களில் இருந்தும் நாள்தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை புரிவார்கள். ஆனால் கொரோனா காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக பல்வேறு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டது. இதில் குறிப்பாக இலவச தரிசனம், அங்கபிரதட்சணம் மேற்கொள்ள தடை விதிக்கப்பட்டிருந்தது. இதையடுத்து கொரோனா பரவல் குறைந்த பிறகு கடந்த ஏப்ரல் 1ம் தேதி முதல் அங்கப்பிரதட்சணம், இலவச தரிசனம் மேற்கொள்ள அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
இதனை தொடர்ந்து தற்போது 2 ஆண்டுகளுக்கு பிறகு வருடாந்திர பிரம்மோற்சவ விழா வருகிற செப்டம்பர் 27ம் தேதி அன்று தொடங்க உள்ளது. ஏனெனில் கொரோனா பரவல் காரணமாக 2 வருடங்கள் எளிமையான முறையில் இத்திருவிழா கொண்டாடப்பட்டது. அத்துடன் நான்கு மாட வீதிகளில் சுவாமி வீதி உலா நடைபெறவில்லை. இதனை தொடர்ந்து இந்த முறை 9 நாட்கள் இத்திருவிழா கோலாகலமாக விழா நடத்த தேவஸ்தானம் திட்டமிட்டுள்ளது. அத்துடன் சுவாமி வீதி உலா, கடைசி நாளில் சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரி உள்ளிட்ட நிகழ்வுகள் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
Post Office சேமிப்பு திட்டம் – வட்டி விகிதம் குறித்த விவரம் இதோ!
மேலும் தெப்பக்குளத்தில் பக்தர்கள் குளிக்கவும் அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது. ஆதலால் தெப்பக்குளத்தில் சீரமைப்பு பணிகள் நடத்தப்பட்டது. அதனால் தெப்ப குளத்தில் பழைய தண்ணீர் முழுவதும் அகற்றப்பட்டு கீழ்ப்பகுதி முழுவதுமாக சுத்தம் செய்யப்பட்டது. இதையடுத்து அருகில் உள்ள கிணறுகளிலும் சுத்தம் செய்யப்பட்டு வர்ணம் பூசப்பட்டது. இப்பணிகள் முழுவீச்சில் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதனை கண்காணிக்கும் பணியில் தேவஸ்தான அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். இத்திருவிழா அக்டோபர் 5ம் தேதி வரை நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்