திருப்பதி கோவிலில் ஏப்ரல் 14 முதல் பக்தர்களுக்கு தடை – கொரோனா பரவல் எதிரொலி!!

0
திருப்பதி கோவிலில் ஏப்ரல் 14 முதல் பக்தர்களுக்கு தடை - கொரோனா பரவல் எதிரொலி!!
திருப்பதி கோவிலில் ஏப்ரல் 14 முதல் பக்தர்களுக்கு தடை - கொரோனா பரவல் எதிரொலி!!
திருப்பதி கோவிலில் ஏப்ரல் 14 முதல் பக்தர்களுக்கு தடை – கொரோனா பரவல் எதிரொலி!!

ஆந்திர மாநிலம் திருப்பதி கோவிலில் ஏப்ரல் 14ம் தேதி முதல் நடைபெற உள்ள ஆர்ஜித சேவைகளில் பக்தர்களுக்கு அனுமதி நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா பரவல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பக்தர்கள் அனுமதி தற்காலிகமாக நிறுத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆர்ஜித சேவை நிறுத்தம்:

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நாடு முழுவதும் இருந்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்வதற்கு வசதியாக ஆர்ஜித சேவை என்ற செயல்பாடு வழக்கத்தில் இருந்தது. இந்த சேவைக்காக பல்வேறு மாநிலங்களிலிருந்து திருப்பதிக்கு தரிசிக்க வரும் பக்தர்கள், ஆன்லைன் வழியாக முன்பதிவு செய்து கொள்ள வேண்டும்.

TN Job “FB  Group” Join Now

இந்நிலையில் திருப்பதி கோவிலில் ஏப்ரல் 14 ஆம் தேதி முதல் மீண்டுமாக, ஆர்ஜித சேவையில் பக்தர்களுக்கான அனுமதி தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருக்கிறது. நாடு முழுவதும் அதிகரித்து வரும் கொரோனா பரவலால், திருப்பதி கோவிலின் ஆர்ஜித சேவையில் பக்தர்களின் அனுமதிக்கு தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளது.

ஏப்ரல் 6 முதல் முழு ஊரடங்கு உத்தரவு – மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!!

முன்னதாக ஏப்ரல் 14 முதல் ஆர்ஜித சேவையில் பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படலாம் என அறங்காவலர் கூட்டத்தில் தீர்மானம் எடுக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. தற்போது கொரோனா பரவல் காரணமாக, இந்த முடிவு தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!