2 ஆண்டுகளுக்கு பின் பூரி ஜெகன்நாதரை தரிசிக்க பக்தர்களுக்கு அனுமதி – அரசு ஏற்பாடு!
நாடு முழுவதும் கொரோனா பரவல் வேகமமெடுத்து வரும் நிலையில் ஒடிசாவின் பூரி நகரத்தில் உள்ள ஜெகன்நாதர் ஆலயத்தில் ரத யாத்திரை இன்று (ஜூலை 1) கோலாகலமாக நடைபெற உள்ளது. இந்த யாத்திரையில் 2 ஆண்டுகளுக்கு பின் பக்தர்கள் பங்கேற்பதால் உற்சாகத்தில் இருக்கின்றனர்.
ரத யாத்திரை:
கொரோனாவின் பிடியில் கடந்த 2 ஆண்டுகளாக மக்கள் சிக்கி தவித்த நிலையில் பல பெரிய வழிபாட்டு தலங்களில் பண்டிகைகள் நடைபெறாமல் இருந்தது. அதனால் பக்தர்கள் வருத்தத்தில் இருந்த நிலையில் 2 ஆண்டுகளுக்கு பின் நிலைமை சரியாகி உள்ளது. அந்த வகையில் ஒடிசாவின் பூரி நகரத்தில் உள்ள ஜெகன்நாதர் ஆலயத்தில் ஆண்டுதோறும் ரத யாத்திரை நடைபெறும். இந்த நிகழ்ச்சியில் பிற மாநிலங்களை சேர்ந்தவர்களும், வெளிநாட்டவர்களும் கலந்து கொள்வார்கள்.
Exams Daily Mobile App Download
இந்த யாத்திரை நடைபெறும் போது ஆயிரக்கணக்கில் பக்தர்கள் கலந்து கொள்வார்கள் ஆனால் கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக பக்தர்களுக்கு அனுமதி வழங்கவில்லை. இந்த ஆண்டு கொரோனா பரவல் குறைந்ததை அடுத்து கட்டுப்பாடுகளில் தளர்வுகள் வழங்கப்பட்டுள்ளது. இதற்காக மாநிலம் முழுவதுமாக பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. பல மாநிலங்களில் இருந்து பக்தர்கள் வர இருப்பதால் பூரி ரயில் நிலையத்தில் ஒன்றிய அமைச்சர்கள் தர்மேந்திர பிரதான் மற்றும் அஸ்வினி வைஷ்ணவ் ஆகியோர் செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகள் பற்றி ஆய்வு மேற்கொண்டனர்.
‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் பிரபலம் – ப்ரோமோ ரிலீஸ்!
மேலும் இந்த ரத யாத்திரையில் ஜெகன்நாதர், பாலபத்ரா, தேவி சுபத்ரா ஆகியோர் அலங்கரிக்கப்பட்டு ஊர்வலமாக வருவார்கள். அதற்காக புதிய ரதம் கட்டப்பட்டுள்ளது. மேலும் பக்தர்கள் நேற்று முதல் கோவிலுக்கு வரத் தொடங்கி இருக்கின்றனர். இந்த ரத யாத்திரையில் சுமார் 10 லட்சம் பேர் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. அதனால் கொரோனா பாதிப்பு ஏற்படாமல் இருக்க மருத்துவ பாதுகாப்பு நடவடிக்கைகள் அங்கு மேற்கொள்ளப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.