தமிழகத்தில் அடுத்த 5 ஆண்டு வளர்ச்சி திட்டங்கள் – அமைச்சர் ஆய்வு!

0
தமிழகத்தில் அடுத்த 5 ஆண்டு வளர்ச்சி திட்டங்கள் - அமைச்சர் ஆய்வு!
தமிழகத்தில் அடுத்த 5 ஆண்டு வளர்ச்சி திட்டங்கள் - அமைச்சர் ஆய்வு!
தமிழகத்தில் அடுத்த 5 ஆண்டு வளர்ச்சி திட்டங்கள் – அமைச்சர் ஆய்வு!

தமிழகத்தில் அடுத்து வர இருக்கும் 5 ஆண்டுகளுக்கான வளர்ச்சி திட்டங்களை குறித்து அமைச்சர் செந்தில் பாலாஜி அதிகாரிகள் ஆய்வு கூட்டத்தில் தெரிவித்துள்ளார். மேலும், அதிகாரிகள் சிறப்பாக செயல்பட்டு அரசுக்கு நற்பெயரை உருவாக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

வளர்ச்சி திட்டங்கள்:

சென்னையில் தமிழ்நாடு மின்சார வாரிய தலைமை அலுவலகத்தில் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலஜி தலைமையில், தலைமை பொறியாளர்கள், மேற்பார்வையாளர்கள் ஆய்வு கூட்டம் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் அரசின் உயரதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர். அதன்பின்னர் மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் செந்தில்பாலாஜி பேட்டி அளித்தார். அப்போது, அப்போது, கடந்த ஆட்சி காலத்தில் குறைந்த மின் அழுத்த பிரச்சினைக்காக எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் 3,000 அதிகமான இயந்திரங்கள் பழுதடைந்துள்ளது. இவை 3 , 4 மதங்களுக்குள் சரி செய்யப்பட்டு விடும். ஊரடங்கு காலத்தில் மின்கட்டணம் தொடர்பாக புகார் அளித்த 14,69,000 பேர்களின் குறை நிவர்த்தி செய்யப்பட்டுள்ளது.

கொரோனா 3ம் அலை; தமிழகம் முழுவதும் விழிப்புணர்வு – மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர்!!

அதன்பின்னர், தமிழகத்தில் அடுத்து வரும் 5 ஆண்டுகளில் மேற்கொள்ளப்பட வேண்டிய வளர்ச்சி திட்டங்கள் குறித்து ஆய்வு செய்து, அவற்றை செயல்படுத்துமாறும் உத்தரவிட்டுள்ளார். தமிழகத்தில் கடந்த மாதம் செய்யப்பட்ட மின் வாரிய பராமரிப்பு பணிகளுக்கு ரூ.625 கோடி திட்ட மதிப்பீட்டில் திட்டம் வகுக்கப்பட்டு, 6,830 மின்மாற்றிகள் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் மின்வாரியத்தின் படி, 9 மண்டலங்கள் 44 வட்டங்கள் உள்ளது. மாவட்ட ரீதீயாக 38 மாவட்டங்களில் 44 வட்டங்கள் உள்ளன. எனவே சில வட்டங்கள் 2 அல்லது 3 மாவட்டங்களில் அமைந்துள்ளன.

TN Job “FB  Group” Join Now

சென்னையில் உள்ள 7 கோட்டங்களில் மேலே செல்லும் மின்கம்பிகளை ரூ.1,283.16 கோடியில் திட்டம் நிறைவேற்றப்படும். மின்வாரியத்தில் பெறப்படும் புகார்கள் அனைத்தும் முதல்வரின் அறிவுறுத்தலின் படி விரைவாக நடவடிக்கை எடுக்கப்படும். அனைத்து பகுதிகளிலும் மின் இணைப்புகள் ஒரே மாதிரியாக வழங்க ஆணையிடப்பட்டுள்ளது. மின்வாரிய அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் அனைவரும் சிறப்பாக செயல்பட்டு தமிழக அரசு மற்றும் முதல்வர் அவர்களுக்கு பெருமை ஏற்படும் வகையில் பணியாற்ற வேண்டும் என்று கூறியுள்ளார்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!