தமிழக ஐடி துறையின் வளர்ச்சி – தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் வெளியிட்ட தகவல்!
தமிழகத்தில் ஐடி துறையானது தொடர்ந்து வளர்ச்சி அடைந்து வருகிறது. இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மனோ தங்கராஜ் ஐடி துறையில் தொலைநோக்கு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருவதாக தெரிவித்தார்.
ஐடி துறை
இந்தியாவில் கடந்த கொரோனா கால கட்டத்தில் இருந்து ஐடி துறை பெரும் வளர்ச்சியடைந்து வருகிறது. தொற்று பரவும் சூழ்நிலையில் மக்கள் டிஜிட்டல் மையத்தையே அதிகம் நாடினர். இதனையடுத்து பல்வேறு துறைகளும் டிஜிட்டலை நோக்கி நகர்ந்தது. அதனால் ஐடி துறையின் தேவை நாளுக்கு நாள் அதிகரித்தது.
தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு – கடலோர மாவட்ட மக்கள் கவனத்திற்கு!!
Follow our Twitter Page for More Latest News Updates
அதனால் தான் கடந்த ஊரடங்கு காலத்திலும் ஐடி துறையின் வேலை வாய்ப்புகள் அதிகரித்தது. மற்ற மாநிலங்களைத் தொடர்ந்து தமிழகத்திலும் ஐடி துறை எதிர்பார்த்த அளவு வளர்ச்சி அடைந்து வருகிறது. தற்போது அதிக வருவாய் ஈட்டும் துறைகளில் ஒன்றாக ஐடி துறை உள்ளது. கடந்த 2022ம் ஆண்டு மட்டும் கோவை மற்றும் மதுரை போன்ற பெருநகரங்களில் ஐடி ஏற்றுமதி 1.09 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது.
இது குறித்து பேசிய அமைச்சர் மனோ தங்கராஜ் ஐடி துறையில் முதலமைச்சர் பொறுப்பேற்றதில் இருந்து தொலைநோக்கு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருவதாக தெரிவித்தார். கொரோனா காலத்தில் கூட ஐடி துறை 18% வளர்ச்சி அடைந்துள்ளது . அத்துடன் 1 டிரில்லியன் டாலர் இலக்கை எட்ட வேண்டும் என திட்டமிட்டுள்ளோம் என்று தெரிவித்தார்.