திருப்பதி தரிசனம் செல்ல திட்டமிடுவோர் கவனத்திற்கு – தேவஸ்தானம் எச்சரிக்கை!
திருப்பதிக்கு ஹெலிகாப்டரில் பயணம் செய்யலாம் என்று கூறி சென்னையை சேர்ந்த தனியார் நிறுவனம் ஒன்று விளம்பரம் செய்து பக்தர்களின் கவனத்தை ஈர்த்தது. இது போன்ற போலி விளம்பரங்களை செய்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று திருப்பதி தேவஸ்தானம் எச்சரித்து உள்ளது.
திருப்பதி தரிசனம்:
ஆந்திராவில் உள்ள திருப்பதி பிரபலமான திருத்தலங்களில் ஆண்டுதோறும் பக்தர்களின் வருகை அதிகரித்து காணப்படும். அதிக வருமானம் ஈட்டும் கோயில்களில் ஒன்று திருப்பதி. இங்கு கொரோனா பரவத் தொடங்கிய நாள் முதல் விதிக்கப்பட்ட ஊரடங்கால் பக்தர்கள் வருகைக்கு அனுமதி மறுக்கப்பட்டது. இதனால் சுவாமிக்கு தரிசனம் கோவில் வளாக ஊழியர்கள் மூலம் நடைபெற்றது. இந்த நிலையில் ஓரளவு பாதிப்புகள் குறைய தொடங்கியதும் கூட்ட நெரிசலை தவிர்ப்பதற்காக ஆன்லைன் மூலம் முன்பதிவு அடிப்படையில் பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படுகிறது.
பள்ளிகள் மூடல், விடுமுறை அறிவிப்பு – 9 மாணவர்களுக்கு கொரோனா எதிரொலி!
கொரோனாவிற்கு பிறகு பக்தர்கள் வருகை அதிகரிக்க தொடங்கியுள்ளது. தினசரி பக்தர்கள் தரிசனஅனுமதி முப்பது ஆயிரமாக உள்ளது. இந்த நிலையில் நேற்றைய தினம் உண்டியலில் 2.95 கோடி ரூபாய் வசூலாகியுள்ளது. வரும் அக்டோபர் 7 ஆம் தேதி முதல் 15 ஆம் தேதி வரை திருமலையில் வருடாந்திர பிரம்மோற்சவ விழா நடைபெறவுள்ளது. கொரோனா முழுமையாக குறையாக காரணத்தால் பக்தர்கள் விழாவில் கலந்து கொள்ள தடை விதிக்கப்பட்டுள்ளது.
‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியல் ஜீவாவின் சினிமா பயணம் – ரசிகர்கள் நெகிழ்ச்சி!
இந்த நிலையில் சென்னையை சேர்ந்த தனியார் டிராவல்ஸ் நிறுவனம் சென்னை, பெங்களூரு, கோயம்புத்தூரில் இருந்து திருப்பதிக்கு ஹெலிகாப்டரில் பயணம் செய்யலாம் என்ற விளம்பரம் செய்தது. இதற்காக ரூ.1,11,116 செலவாகும் என விளம்பரத்தில் தெரிவிக்கப்பட்டது. இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இது போன்ற போலியான விளம்பரங்களை பக்தர்கள் நம்ப வேண்டாம் என்று திருப்பதி தேவஸ்தானம் எச்சரித்துள்ளது. மேலும் இது போன்ற விளம்பரங்கள் செய்தால் அந்த நிறுவனத்தின் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளது.