திருப்பதி தரிசனம் செல்ல திட்டமிட்டவர்கள் கவனத்திற்கு – தேவஸ்தானம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!

0
திருப்பதி தரிசனம் செல்ல திட்டமிட்டவர்கள் கவனத்திற்கு - தேவஸ்தானம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!
திருப்பதி தரிசனம் செல்ல திட்டமிட்டவர்கள் கவனத்திற்கு - தேவஸ்தானம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!
திருப்பதி தரிசனம் செல்ல திட்டமிட்டவர்கள் கவனத்திற்கு – தேவஸ்தானம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!

இந்தியா முழுவதும் கொரோனா பரவல் குறைந்து வருவதை தொடர்ந்து பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்டு வருகிறது. அதன் தொடர்ச்சியாக திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பக்தர்களுக்கு அமல்படுத்த கட்டுப்பாடுகளில் படிப்படியாக தளர்வுகளை வழங்கி வருகிறது. தற்போது இலவச நேரடி தரிசன டிக்கெட்டுகளை தேவஸ்தானம் வழங்கி வருகிறது. தற்போது மற்றொரு புதிய அறிவிப்பை தேவஸ்தானம் வெளியிட்டுள்ளது.

சிறப்பு தரிசனம்

ஆந்திர மாநிலத்தில் உள்ள உலக புகழ்பெற்ற திருமலை திருப்பதி கோவிலில் ஏழுமலையானை தரிசிக்க நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை புரிவார்கள். அதனால் கொரோனா கால கட்டத்தில் பக்தர்களின் வருகையை கட்டுப்படுத்த பக்தர்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டது. இதில் முதலாவதாக இலவச தரிசன டிக்கெட் ரத்து செய்யப்பட்டது. அத்துடன் ரூ.300 சிறப்பு தரிசன டிக்கெட் மட்டுமே இணையதளத்தில் வெளியிடப்பட்டது. மேலும் இந்த டிக்கெட்டும் குறைந்த எண்ணிக்கையில் வெளியிடப்பட்டது. இதனை முன்பதிவு செய்தவர்கள் மட்டுமே சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டார்கள்.

தமிழகத்தில் இந்து சமய அறநிலையத்துறையில் வேலைவாய்ப்பு – 8ம் வகுப்பு தேர்ச்சி போதும்!

மேலும் திருப்பதிக்கு வருகை புரியும் பக்தர்கள் கொரோனாவின் 2 டோஸ் தடுப்பூசியை செலுத்தியதற்கான சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும் அல்லது 48 மணி நேரத்திற்கு முன்பு எடுக்கப்பட்ட ஆர்டிபிசிஆர் பரிசோதனை முடிவில் கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும் என்று தேவஸ்தானம் அறிவித்தது. தற்போது நாடு முழுவதும் கொரோனா பரவல் குறைந்து கொண்டு வருவதால் தேவஸ்தானம் பல்வேறு தளர்வுகளை வழங்கி வருகிறது. அந்த வகையில் தற்போது இலவச தரிசன டிக்கெட்டுகளை நேரடியாக வழங்கி வருகிறது. அத்துடன் ஆர்ஜித சேவைகளுக்கு அனுமதி மற்றும் அங்கபிரதித்தனம் செய்வதற்கு அனுமதி உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளது.

அதன் தொடர்ச்சியாக தற்போது மூத்த குடிமக்கள் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு தரிசன டிக்கெட்டுகளை வழங்க உள்ளதாக தேவஸ்தானம் அறிவித்துள்ளது. மேலும் இதனை வருகிற ஏப்ரல் 8ம் தேதி முதல் இணையதளத்தில் வெளியிட உள்ளதாகவும் தெரிவித்துள்ளது. இந்த டிக்கெட்டுகளை ஆதார் அட்டைகளை சமர்ப்பித்து முன்பதிவு செய்து கொள்ளலாம். இந்த டிக்கெட்டுகளை முன்பதிவு செய்தவர்கள் ஏப்ரல் 9ம் தேதி அன்று காலை தினமும் 10 மணிக்கு சுவாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள். ஆனால் இதில் வெள்ளிக்கிழமைகளில் மட்டும் மாலை 3 மணிக்கு மேல் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள் என்றும் நாள் ஒன்றுக்கு 1000 டோக்கன்கள் இந்த சிறப்பு தரிசனத்திற்காக வழங்கப்படும் என்றும் தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!