தமிழகத்தில் இன்று முதல் திரையரங்குகள் திறப்பு – வெளியாக உள்ள படங்களின் விவரம்!!
தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக தியேட்டர்கள் மூடப்பட்டு பல மாதங்கள் ஆன நிலையில், தற்போது கொரோனா பரவல் குறைந்து வருவதால் இன்று (ஆகஸ்ட் 23) முதல் தியேட்டர்கள் திறக்க அரசு அனுமதி வழங்கி உள்ளது. மேலும் இன்று வெளியாக உள்ள படங்கள் குறித்த விவரங்களும் வெளியாகி உள்ளன.
திரையரங்குகள் திறப்பு:
தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை தாக்கம் காரணமாக பல்வேறு பாதிப்புகள் ஏற்பட்டது. இந்நிலையில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக தியேட்டர்கள் மூடப்பட்டன. பல மாதங்களாக கொரோனா பாதிப்பு காரணமாக திரையரங்குகள் திறக்கப்படவில்லை. பல படங்கள் தயாரிக்கப்பட்டு வெளியாக முடியாமல் சிரமத்தில் உள்ளனர். அதே போல தியேட்டர் உரிமையாளர்கள் பலர் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டது.
தமிழகத்தில் நகைக்கடைகள் இன்று மூடல் – புதிய ஹால்மார்க் விதி எதிர்ப்பு!!
இந்நிலையில் தற்போது கொரோனா பாதிப்பு குறைந்து வருவதால் பல்வேறு தளர்வுகள் வழங்கப்பட்டுள்ளன. திரையரங்குகளில் 50 சதவிகித பார்வையாளர்களுடன் திறக்க அனுமதி வழங்க வேண்டும் என முதல்வரிடம் தியேட்டர் உரிமையாளர்கள் பல முறை கோரிக்கை வைத்தனர். இந்நிலையில் நேற்று அறிவித்த ஊரடங்கு தளர்வுகளில் இன்று முதல் தியேட்டர்களில் 50 சதவிகித பார்வையாளர்களுடன் இயங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மதிப்பெண் சான்றிதழ் – இன்று வெளியீடு!!
இதுகுறித்து திரையரங்கு உரிமையாளர் சங்கத் தலைவர் திருப்பூர் சுப்பிரமணியன் கூறுகையில், தமிழகத்தில் மொத்தம் 1100 தியேட்டர்கள் இயங்கி வருகின்றனர். அதில் உரிமையாளர்கள் மற்றும் வேலை செய்யும் பணியாளர்கள் அனைவரும் தடுப்பூசி எடுத்துக் கொண்டுள்ளோம். மேலும் பல மாதங்களாக மூடப்பட்டு தற்போது திறக்கப்பட்டாலும் பழைய கட்டணமே வசூலிக்கப்படும். இன்று முதற்கட்டமாக அரண்மனை 3, சிவக்குமார் சபதம், பெல் பாட்டம், லாபம், கான்ஜுரிங் 3 ஆகிய படங்கள் வெளியாக உள்ளன என அவர் தெரிவித்தார்.