நாளைய (ஜூன் 16) மின்தடை பகுதிகள் குறித்த விவரம் – மின்சார வாரியம் அறிவிப்பு!
மன்னார்குடியை அடுத்த திருமக்கோட்டை துணை மின் நிலையத்தில் மாதாந்திர பணிகள் நடைபெறுவதால் நாளை ஜூன் 16ம் தேதி (வியாழக்கிழமை) மின் விநியோகம் இருக்காது என மின் செயற்பொறியாளர் சா.சம்பத் தெரிவித்திருக்கிறார்.
மின்தடை
மின்சாரம் என்பது மக்களின் அத்தியாவசிய தேவைகளில் ஒன்றாக மாறிவிட்டது. எத்தனை வருடங்களுக்கு முன்னர் நம் முன்னோர்கள் மின்சாரம் இல்லாமல் மின் விளக்கை பயன்படுத்தி வாழ்ந்திருக்கிறார். ஆனால், இன்றைய சூழலில் மின்சாரம் இல்லாமல் ஒரு நிமிடம் கூட இல்லாத நிலை ஏற்பட்டிருக்கிறது. இதனால் மக்கள் அனைவரும் எந்த அளவுக்கு மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்த முடியுமோ அந்த அளவுக்கு பயன்படுத்த வேண்டும் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.
TN Job “FB Group” Join Now
அந்த வகையில் மின்சாரத்தையும் அலட்சியமாக, தவறாக பயன்படுத்தினால் அது தரும் ஆபத்துகளை மிக அதிகம். ஆகையால், மிக பாதுகாப்பாக முன் எச்சரிக்கை உடன் பயன்படுத்த வேண்டும். மக்களுக்கு தடையில்லா மின்சாரம் வழங்குவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருகிறது. அதுமட்டுமின்றி, மாதம் ஒரு முறை மின் விநியோகம் தடை செய்யப்பட்டு, மின் சாதனங்கள் பழுது பார்த்தல் மற்றும் மின்கசிவு, மின் துண்டிப்பு சரிபார்த்தல் மற்றும் மரக் கிளைகளை அகற்றுதல் போன்ற பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்தியாவில் மீண்டும் முழு ஊரடங்கு அமல்? பிரதமரின் முடிவு இது தான்!
அதன்படி, திருமக்கோட்டை மின் நிலையத்தில் இருந்து மின் விநியோகம் பெரும் பகுதிகளான திருமக்கோட்டை, மேலநத்தம், பாளையங்கோட்டை, ராதா நரசிம்மபுரம், தென்பரை, ராஜகோபாலபுரம், கோவிந்த நத்தம், பெருமாள் கோயில் நத்தம், மான்கோட்டை நத்தம், வல்லூர், பரசபுரம் போன்ற பகுதிகளில் மின் சார்ந்த மாதாந்திர பணிகள் நடைபெறுவதால் நாளை ஜூன் 16ம் தேதி வியாழக்கிழமை மின்தடை செய்யப்படுவதாக மின் செயற்பொறியாளர் சா. சம்பத் தெரிவித்திருக்கிறார்.