தமிழக மருத்துவ மேற்படிப்பு குறித்த இட ஒதுக்கீடு & ஊக்க மதிப்பெண்கள் விவரம் – ஐகோர்ட் புதிய உத்தரவு!

0
தமிழக மருத்துவ மேற்படிப்பு குறித்த இட ஒதுக்கீடு & ஊக்க மதிப்பெண்கள் விவரம் - ஐகோர்ட் புதிய உத்தரவு!
தமிழக மருத்துவ மேற்படிப்பு குறித்த இட ஒதுக்கீடு & ஊக்க மதிப்பெண்கள் விவரம் - ஐகோர்ட் புதிய உத்தரவு!
தமிழக மருத்துவ மேற்படிப்பு குறித்த இட ஒதுக்கீடு & ஊக்க மதிப்பெண்கள் விவரம் – ஐகோர்ட் புதிய உத்தரவு!

தமிழகத்தில் மருத்துவ மேற்படிப்பு பயிலும் அரசு மருத்துவர்கள் மற்றும் கிராமப்புற, மலைப்பகுதியில் பணியாற்றக்கூடிய அரசு மருத்துவர்களுக்கு இட ஒதுக்கீடு, ஊக்க மதிப்பெண்கள் நடைமுறையை பின்பற்ற ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.

ஐகோர்ட் உத்தரவு:

தமிழகத்தில் மருத்துவ மேற்படிப்புகளில் அரசு மருத்துவர்களுக்கும், கிராமப்புறங்களில் பணியாற்றி வரும் மருத்துவர்களுக்கும் மகிழ்ச்சி அளிக்கும் விதமாக ஒரு தீர்ப்பு வெளியாகியுள்ளது. அந்த வகையில் மருத்துவ மேற்படிப்புகளில் அரசு மருத்துவர்களுக்கு 5 சதவீத இடஒதுக்கீடு மற்றும் கிராமப்புறங்கள் மற்றும் மலைப்பகுதியில் பணியாற்றக்கூடிய அரசு மருத்துவர்களுக்கு 30 சதவீத ஊக்க மதிப்பெண்ணும் வழங்கப்படும் என 2021ம் ஆண்டு அக்டோபர் மாதம் தமிழக அரசு உத்தரவு அளித்தது. இந்த உத்தரவு குறித்து பல்வேறு எதிர்ப்புகள் கிளம்பி உள்ளது.

மேலும் இந்த உத்தரவை எதிர்த்து வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை தனி நீதிபதி தண்டபாணி விசாரித்தார். அப்போது அரசு மருத்துவர்களுக்கு மற்றும் கிராமப்புறங்கள் மற்றும் மலைப்பகுதியில் பணியாற்றக்கூடிய அரசு மருத்துவர்களுக்கு தமிழக அரசு பிறப்பித்த இடஒதுக்கீடு, ஊக்க மதிப்பெண் ஆகிய இரண்டு சலுகைகளும் வழங்க எந்தவிதமான தடையும் இல்லை என கூறி மனுவை தள்ளுபடி செய்து நீதிபதி உத்தரவிட்டிருக்கிறார். மேலும் இந்த இரண்டு சலுகைகளை தொடர்ந்து பொதுப்பிரிவிலும் பங்கேற்பதற்கு இவர்களுக்கு எந்த தடையும் இல்லை என நீதிபதி தீர்ப்பு அளித்தார். இந்த தீர்ப்பு அரசு மருத்துவர்களுக்கு பெரும் நிம்மதியை அளித்துள்ளது.

படியில் தவறி விழுந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் ராமமூர்த்தி – ‘பாக்கியலட்சுமி’ ப்ரோமோ ரிலீஸ்!

இந்த தீர்ப்பு குறித்து தனியார் மருத்துவ கல்லூரிகள் சார்பில் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. எனவே இந்த தீர்ப்பை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் தனியார் மருத்துவக் கல்லூரி மாணவர் மேல்முறையீடு செய்திருந்தனர். இந்த வழக்கானது நீதிபதிகள் பரேஷ் உபாத்யாயா தலைமையில் இன்று விசாரணைக்கு வந்தது. இந்நிலையில் வழக்கை விசாரித்த நீதிபதி, தனி நீதிபதி தண்டபாணியின் உத்தரவு செல்லும் என தீர்ப்பு அளித்துள்ளார். இந்த வகையில் மருத்துவ மேற்படிப்புகளில் இட ஒதுக்கீடு, ஊக்க மதிப்பெண்கள் நடைமுறையை நடப்பு கல்வியாண்டிலும் தொடரவேண்டும் என எதிர்காலத்தில் வழக்கு தொடர வாய்ப்பு உள்ளதாக கூறி வழக்கை முடித்து வைத்தார்.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!