ஜியோ (Jio) பயனர்களுக்கு சிறப்பம்சம் – தடுப்பூசி பற்றிய விவரங்கள் வாட்ஸ்ஆப்பில் பெறலாம்!
ஜியோ நிறுவனம் தங்களது வாடிக்கையாளர்களுக்கு கொரோனா வைரஸ் தடுப்பூசி பற்றிய தகவல்களை வாட்ஸ்ஆப் வாயிலாக அறிந்து கொள்ளும் புதிய அம்சத்தினை அறிமுகப்படுத்தி உள்ளது.
புதிய அம்சம்:
ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் தங்களது வாடிக்கையாளர்களுக்கு பல சிறப்பு சலுகைகளை அதிரடியாக அவ்வப்போது அறிவிக்கும். இதனாலேயே தொடங்கப்பட்ட சில ஆண்டுகளிலேயே ஜியோ நிறுவனம் அபார வளர்ச்சி அடைந்தது. அந்த வகையில் நாடு முழுவதும் தற்போது கொரோனா தொற்றின் பாதிப்புகள் அதிகரித்துள்ள நிலையில், அதற்கான தடுப்பூசி பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. தடுப்பூசி இருப்பு பற்றிய உண்மை தகவல்கள் எங்கும் சொல்லப்படுவதில்லை.
தமிழ்நாட்டின் மொத்த கடன் தொகை ரூ.5.12 லட்சம் கோடி – டாப் மாநிலங்கள் பட்டியல்!
இந்நிலையில், ஜியோ நிறுவனம் கொரோனா தடுப்பூசி இருப்பு பற்றிய முழுமையான தகவல்களை வாட்ஸ் ஆப் மூலமாக தெரிவிக்கும் வகையில் புதிய அம்சத்தினை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் மூலம் ஜியோ பயனர்கள் அனைவரும் பலனடைவார்கள். மேலும், பயன்படுத்துவதற்கு எளிய முறையிலும், OTP போன்ற எந்த ஒரு சிக்கலும் இல்லாமல் இந்த வசதியை பயன்படுத்தலாம்.
தடுப்பூசி இருப்பு பற்றிய தகவல்களை அறிந்து கொள்ளும் முறை:
- முதலில் உங்களது மொபைலில் 70007 70007 என்ற எண்ணை சேமித்து கொள்ள வேண்டும்.
- பின்னர், Hi என்று செய்தி அனுப்ப வேண்டும்.
- இப்பொழுது சாட்போட் ‘Main Menu’ க்கான லின்க் ஒன்றுடன் அடிப்படை விவரங்களை தெரிவிக்கவும்.
TN Job “FB Group” Join Now
- ‘Find Vaccine Centres’ என்பதை தேர்வு செய்ய வேண்டும்.
- இப்பொழுது, தடுப்பூசி மையம் மற்றும் தடுப்பூசி இருப்பு பற்றிய விவரங்கள் உங்களுக்கு அனுப்பப்படும்.
- உங்கள் பகுதியின் பின்கோடை பதிவு செய்து விவரங்களை புதுப்பித்துக் கொள்ளலாம்.
தடுப்பூசி போடுவதற்கு இவ்வளவு விளம்பரம் தேவை ஏற்பட்டிருக்காது ஐயா மோடி அவர்கள் கொரோனா ஆரம்ப நிலையில் தடுப்பூசி போடுவதற்கு முதல் தவணையை இவ்வளவு என்று நிர்ணயம் செய்து மக்களிடம் அறிவித்திருக்க வேண்டும், இரண்டாவது தடுப்பூசி போடுவதற்கு இவ்வளவு என்று நிர்ணயம் செய்து மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி இருக்கும் … கொரோனாவி ன் தாக்கம், அதிகம் என்று எனக்கும் தெரியும், ஆரம்ப நிலையிலேயே அறிவித்திருக்கலாம் இதுபோன்ற உரையாடலை அதற்காக நான் மக்கள் பணத்தை பெரிதாக எண்ணுகிறார்கள் என்று சொல்லவில்லை மக்களை எவ்வழியில் கொண்டு செல்ல வேண்டும், என்பதை அறிந்திருக்க வேண்டும் இந்த அரசாங்கம் ஊசி இன் தாக்கம் ஒரு பொய்யான செய்தி என்று பூளம்புவதற்குதேவை இருந்திருக்காது, மக்கள் பணத்திற்காக உயிரை விட முடியுமா என்ற கேள்வி உங்களுக்குள் எழலாம் ஆனால் தடுப்பூசி என்று ஒன்று வந்த பிறகும் மக்கள் தயங்குவது ஏன்?, காரணம் என்ன? இது யாருடைய தவறு?