இந்திய டிவி சேனல்களுக்கான கட்டுப்பாடுகள் தளர்வு – மத்திய ஒளிபரப்பு துறை அறிவிப்பு!
இந்திய டிவி சேனல்கள் அதிக அளவு வெளி நாடுகளின் செயற்கைகோளையே பயன்படுத்தி வருகின்றனர். இதற்கென்று சில கட்டுப்பாடுகள் அரசால் விதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் செயற்கைக்கோள் விதிமுறைகள் மற்றும் கட்டுப்பாடுகளில் சில தளர்வுகள் அளிக்கவிருப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
கட்டுப்பாடு:
இந்தியாவில் மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகள் தனியாகவோ அல்லது தனியார் துறையுடன் சேர்ந்து தொலைக்காட்சி சேனல்கள் நடத்துவதை அண்மையில் மத்திய அரசு தடை செய்தது. இதுவரை நடத்தி வந்த சேனல்கள் இனி அரசின் பிரசார் பாரதியில் இணைக்கப்படும் என்றும் தெரிவித்தது. அதனை தொடர்ந்து தற்போது டிவி சேனல்களுக்கான வெளிநாட்டு செயற்கைக்கோள் கட்டுப்பாடுகளை மத்திய அரசு தளர்த்தவுள்ளது.
Exams Daily Mobile App Download
நாடு முழுவதும் உள்ள மொத்தம் 898 டிவி சேனல்களில், 532 சேனல்கள் வெளிநாட்டு செயற்கைக்கோள்களையே பயன்படுத்தி வருகின்றனர். இவைகள் சிக்னல்களை செயற்கைக்கோள்களுக்கு அனுப்பி அதிலிருந்து சிக்னலை பெற்று ஒளிபரப்பி வருகின்றது. இந்த முறை ‘டவுன்லிங்கிங்’ எனப்படுகிறது. இந்த வெளிநாடுகளின் செயற்கை கோளை பயன்படுத்துவதற்கு கடும் கட்டுப்பாடுகள் அரசால் விதிக்கப்பட்டுள்ளது.
அக்.31 தமிழகத்தில் இத்தனை பகுதிகளில் மின்தடையா? உங்க பகுதியும் இருக்கா – லிஸ்ட் இதோ!
Follow our Instagram for more Latest Updates
இவற்றை பின்பற்றி டிவி சேனல்களை நடத்த வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த நிலையில் மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு துறை செயலாளர் வெளிநாட்டு செயற்கைக்கோள் விதிமுறைகளில் சில தளர்வுகள் அளிக்கப்பட உள்ளதாக தெரிவித்துள்ளார். இதன் மூலம் இந்திய டிவி சேனல்கள் உள்நாட்டு செயற்கைக்கோள்களை பயன்படுத்தும் வாய்ப்பு அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.