நாட்டில் வெளிநாட்டு பயணிகளுக்கான கட்டுப்பாடு நீக்கம் – அரசு அதிரடி அறிவிப்பு!
உலகம் முழுவதும் தற்போது கொரோனா பரவல் தாக்கம் குறைய தொடங்கியுள்ளது. இதனை தொடர்ந்து தற்போது தென்கொரியாவில் சர்வதேச விமானங்களுக்கு விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகளுக்கு தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தளர்வுகள்:
உலக நாடுகளை சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் என்னும் பெருந்தொற்று கடுமையான பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் தொற்று பரவலை கட்டுப்படுத்த பல்வேறு ஊரடங்கு கட்டுப்பாடுகள் மற்றும் தடுப்பூசி மருந்துகள் கண்டுபிடிக்கப்பட்டாலும் பல்வேறு வகைகளில் உருமாற்றம் அடைந்து கொரோனா வைரஸை விட வீரியம் மிக்கதாக வேகமாக பரவி வருகிறது. இதில் குறிப்பாக டெல்டா, டெல்டா ப்ளஸ், ஓமைக்ரான் வைரஸ் உள்ளிட்ட கொரோனா உருமாற்றம் அடைந்த வைரஸ் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தியது.
Exams Daily Mobile App Download
இதனை தொடர்ந்து தற்போது ஒமைக்காரனின் புதிய வகையான பிஏ.2 என்ற புதிய வகை கொரோனா வைரஸ் பரவி வருகிறது. அதன்படி தென்கொரியாவில் இந்த புதிய வகை வைரஸ் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. அத்துடன் நாளுக்கு நாள் நோய் தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே இருந்தது. அதனால் மேலும் தொற்று பரவாமல் இருக்க பல்வேறு கட்டுப்பாடுகளை அந்நாட்டு அரசாங்கம் அமல்படுத்தியது. அத்துடன் தடுப்பூசி பணிகளும் தீவிரப்படுத்தப்பட்டது. இதையடுத்து தற்போது நோய் தொற்று பரவல் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.
இந்து சமய அறநிலையத் துறையில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள் – உடனே விண்ணப்பிக்கவும்!
அதன்படி தற்போது அமல்படுத்தப்பட்ட பல்வேறு கட்டுப்பாடுகளுக்கு தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளது. இதில் குறிப்பாக தென்கொரியாவுக்கு வரும் வெளிநாட்டு பயணிகளுக்கு வருகிற ஜூன் 8ம் தேதி முதல் தடுப்பூசி செலுத்தாத பயணிகளை தனிமைப்படுத்த அவசியமில்லை என்று தளர்வு அளிக்கப்பட்டுள்ளது. அத்துடன் சர்வதேச விமான பயணிகளுக்கு விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகளும் நீக்கப்படுகிறது. ஆனால் பயணிகள் கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் சமர்ப்பிக்க வேண்டும் என்ற கட்டுப்பாடு தொடரும் என்றும் தென்கொரிய பிரதமர் தெரிவித்துள்ளார்.