பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை மேற்கொள்ள வேண்டாம் – DEO சுற்றறிக்கை!
கொரோனா தொற்று குறையாத காரணத்தால் தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் கல்வி வட்டாரத்திற்கு உட்பட்ட அரசு, மெட்ரிக் மற்றும் தனியார் பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை மேற்கொள்ள வேண்டாம் என மாவட்ட கல்வி அலுவலர் பள்ளிகளுக்கு சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.
மாணவர் சேர்க்கை:
தமிழகத்தில் 2021 ஆம் ஆண்டின் புதிய கல்வியாண்டு தொடங்கியுள்ளது. அதனால் அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஜூன் 14 முதல் தலைமை ஆசிரியர்கள் பள்ளிக்கு வருகை புரிய வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டது. ஆசிரியர்கள் பள்ளிகளில் பாட புத்தகங்களை வழங்குவது, புதிய கல்வியாண்டிற்கான மாணவர் சேர்க்கையை தொடங்குவது போன்ற பணிகளை செய்ய அறிவுறுத்தப்பட்டது. அதன் படி நேற்று முதல் தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் புதிய வகுப்புக்கான மாணவர் சேர்க்கை தொடங்கியது.
பழைய 500 ரூபாய் நோட்டுக்கு ரூ.10 ஆயிரம் வரை பெறலாம் – தவறாமல் படிங்க!!
11ம் வகுப்பு மாணவர்களுக்கு அவர்களின் 9ம் வகுப்பு மதிப்பெண்கள் அடிப்படையில் சேர்க்கை நடைபெற்றது. பிளஸ் 2 மாணவர்களுக்கு மதிப்பீட்டின் படி மதிப்பெண்கள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அனைத்து வகுப்புகளுக்கான பாடப்புத்தகங்கள் அனைத்து மாவட்டங்களுக்கும் கொண்டு சேர்க்கப்பட்டுள்ளது. மாணவர் சேர்க்கை முடிந்த பிறகு புத்தகங்கள் வழங்கும் பணி தொடரும் மற்றும் நலத்திட்டங்களும் வழங்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.
TN Job “FB Group” Join Now
இந்த நிலையில் கொரோனா பரவல் குறையாத மாவட்டங்களில் மாணவர்கள் சேர்க்கை நடைபெற கூடாது என அரசு அறிவுறுத்தியுள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்தில் கொரோனா தொற்று குறையவில்லை. அதனால் கும்பகோணம் கல்வி மாவட்டத்திற்கு உட்பட்ட அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகள் அரசின் வழிகாட்டு நெறிமுறைகள் வரும் வரை மாணவர் சேர்க்கையை மேற்கொள்ள வேண்டாம் என அனைத்து பள்ளி தலைமையாசிரியர்களும் மாவட்ட கல்வி அலுவலர் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.