தமிழகத்தில் மீண்டும் பரவும் டெங்கு காய்ச்சல் – 4 வயது சிறுமி உயிரிழப்பு! அச்சத்தில் பொதுமக்கள்!
தமிழகத்தில் கொரோனா மற்றும் குரங்கு அம்மை பரவலை தொடர்ந்து தற்போது டெங்கு பரவி வருகிறது. மதுரை மாவட்டத்தில் 4 வயது சிறுமி டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளார். அதனால் அப்பகுதி மக்கள் அச்சத்தில் உறைந்துள்ளனர்.
டெங்கு காய்ச்சல்:
தமிழகத்தில் கடந்த 2 வருடங்களாக கொரோனா வைரஸ் தொற்று தீவிரமாக பரவி வருகிறது. இதனை கட்டுப்படுத்த தடுப்பூசி செலுத்தும் பணிகள் துரிதமாக நடைபெற்று வருகிறது. அனைத்து மாவட்டங்களிலும் முகாம்கள் அமைக்கப்பட்டு கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு 2 டோஸ் தடுப்பூசியை தொடர்ந்து தற்போது பூஸ்டர் எனும் மூன்றாம் டோஸ் தடுப்பூசியும் செலுத்தப்பட்டு வருகிறது. தகுதியானவர்கள் 3ம் டோஸை செலுத்த சுகாதாரத்துறை அறிவுறுத்தி வருகிறது. அதனை தொடர்ந்து அடுத்த தாக்குதலாக குரங்கு அம்மை அச்சறுத்தல் ஏற்பட்டது.
தென்னாப்பிரிக்காவில் இருந்து பரவத் தொடங்கிய குரங்கு அம்மை இந்தியாவிலும் பரவத் தொடங்கியதால் தமிழகத்தில் தடுப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டது. அதன் ஒரு பகுதியாக சர்வதேச விமான நிலையங்களில் கண்காணிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டது. இதற்கு மத்தியில் மதுரை மாவட்டத்தில் சிறுமி ஒருவருக்கு டெங்கு காய்ச்சல் உறுதி செய்யப்பட்டுள்ளது. மதுரை மாவட்டம் சந்தைப்பேட்டை பகுதியை சேர்ந்த 4 வயது சிறுமி டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்த சிறுமி இன்று சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
Exams Daily Mobile App Download
தற்போது சிறுமி உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. மேலும் மதுரை மாவட்டத்தில் இதுவரை 40 பேர் டெங்குவால் பாதிக்கப்பட்டுள்ளனர். பொதுவாக மழை காலங்களில் தேங்கியுள்ள கழிவு நீரின் காரணமாக டெங்கு பரவல் அதிகமாக இருக்கும் தற்போது வளிமண்டல கீழடுக்கு சுழற்சியின் காரணமாக தமிழகம் முழுவதும் அவ்வப்போது மழை பெய்து வருவதால் காலநிலை மாற்றம் ஏற்பட்டுள்ளது. இதனால் டெங்கு பரவும் அபாயம் அதிகரித்துள்ளது. ஏற்கனவே மக்கள் கொரோனாவுடன் போராடி வரும் நிலையில் டெங்கு பரவுவது அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்