தமிழகத்தில் பழைய ஓய்வூதிய திட்டம் அமலாகுமா? வலுக்கும் கோரிக்கை!
பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த கோரி பல ஆண்டுகளாகவே அரசு ஊழியர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். தற்போது ஜூன் 27 ஆம் தேதி நாடு முழுவதும் வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபடவுள்ளனர்.
பழைய ஓய்வூதிய திட்டம்
கடந்த 2003 ஆம் ஆண்டிற்கு பிறகு அரசு பணியில் சேர்ந்தவர்களுக்கு பங்களிப்புடன் கூடிய புதிய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்தப்பட்டது. இந்த புதிய ஓய்வூதிய திட்டத்தில் குடும்ப ஓய்வூதியம் கிடையாது என சில பாதகமான அம்சங்கள் இடம் பெற்ற காரணத்தினாலும், பல பலன்களும், சலுகைகளும் கிடைக்காத காரணத்தினால் புதிய ஓய்வூதிய திட்டத்தை நிறுத்த வேண்டும் எனவும், மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமலுக்கு கொண்டு வர வேண்டும் எனவும் ஊழியர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
TN Job “FB Group” Join Now
தமிழகத்தில் மட்டுமல்லாமல் அனைத்து மாநிலங்களிலுமே புதிய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என கோரிக்கை விடுத்து வருகின்றனர். அரசு ஊழியர்களின் கோரிக்கையை ஏற்று ராஜஸ்தான், சத்தீஸ்கர் போன்ற மாநிலங்களில் பழைய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்தப்பட்டது. தமிழகத்திலும் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என அரசு ஊழியர்கள் நெடு நாள் கோரிக்கையாக வைத்து வருகின்றனர். கடந்த சட்டமன்ற தேர்தலின் போது தமிழகத்தில் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்துவோம் என திமுக கட்சியின் சார்பில் உத்தரவாதம் அளிக்கப்பட்டது.
12ஆம் தேர்ச்சி பெற்றவர்களுக்கு HDFC வங்கியில் வேலை ரெடி – ஜூலை 31 விண்ணப்பிக்க இறுதி நாள்..!
ஆனால், திமுக ஆட்சிக்கு வந்து கிட்டத்தட்ட ஒரு ஆண்டுகள் ஆகியும் இன்னும் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தவில்லை. இந்நிலையில், வரும் செப்டம்பர் மாதத்தில் டெல்லி ஜந்தர் மந்தரில் 25 லட்சம் மத்திய அரசு ஊழியர்கள் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த கோரி போராட்டம் நடத்தவுள்ளனர். இந்த போராட்டத்தில் ரயில்வே ஊழியர்கள் என பல மத்திய அரசு ஊழியர்களும் கலந்துகொள்ள இருக்கின்றனர். இது மட்டுமல்லாமல் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த கோரி வரும் ஜூன் 27ஆம் தேதி பொதுத்துறை வங்கி ஊழியர்கள் நாடு முழுவதும் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளனர்.