தமிழகம் முழுவதும் மீண்டும் பள்ளிகள் மூடல்? வலுக்கும் கோரிக்கை!
தமிழகத்தில் கொரோனா பரவல் குறைந்துள்ளதால் பள்ளி, கல்லூரிகளை பிப்ரவரி 1ம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. கொரோனா பரவல் உள்ள சூழலில் 1 முதல் 9ம் வகுப்பு மாணவர்களுக்கு விடுமுறை அளிக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.
பள்ளி விடுமுறை
தமிழகத்தில் கொரோனா பரவலின் 3ம் அலை குறைய தொடங்கியுள்ளது. அதனால் ஊரடங்கு கட்டுப்பாடுகளில் சில தளர்வுகளை அரசு அறிவித்துள்ளது. இதில் குறிப்பாக இரவு நேர ஊரடங்கு நீக்கப்பட்டுள்ளது. அத்துடன் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து மாணவர்களின் கல்வி நலன் கருதி 1 முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பிப்ரவரி 1ம் தேதி முதல் அனைத்து பள்ளிகளும் திறக்கப்பட்டு நேரடி முறையில் வகுப்புகளை நடத்தலாம் என்று அரசு அறிவித்துள்ளது.
TN Job “FB Group” Join Now
அத்துடன் மாணவர்களின் விருப்பத்திற்கேற்ப பள்ளிக்கு வரலாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில் கொரோனா பரவல் உள்ளதால் தடுப்பூசி செலுத்தாத மாணவர்களுக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளது என்று பெற்றோர்கள் மத்தியில் அச்சம் நிலவுகிறது. மேலும் இது தொடர்பாக டாக்டர் அன்புமணி ராமதாஸ் அவர்கள் சமூக வலைதளமான ட்விட்டரில் முக்கிய கோரிக்கையை வைத்துள்ளார். இதில், தமிழகத்தில் 1 முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு தற்போது பள்ளிகள் திறக்கப்பட்டு நேரடி முறையில் நடத்தப்பட்டு வருகிறது.
IPL 2022: மீண்டும் சன்ரைசர்ஸ் அணிக்காக விளையாட விரும்புகிறேன் – பிரியம் கார்க் பேட்டி!
ஆனால் கொரோனா பரவல் காரணமாக இன்னும் சில மாநிலங்களில் பள்ளிகள் திறக்கப்படவில்லை. சில மாநிலங்களில் 10 முதல் 12ம் வகுப்புகளுக்கு மட்டும் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளது. தமிழகத்திலும் பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு மட்டும் பள்ளிகள் திறக்கப்பட்டால் போதுமானது. அதாவது 10 முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் நேரடி முறையில் வகுப்புகளை நடத்த வேண்டும். அத்துடன் 1 முதல் 9ம் வகுப்பு மாணவர்களுக்கு கொரோனா பரவல் முழுமையாக குறையும் வரை பள்ளிகள் திறப்பை தள்ளி வைக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.