தடுப்பூசி போட்டவர்களையும் தாக்கும் டெல்டா வைரஸ் – திடுக்கிடும் தகவல்
கொரோனா தொற்றின் தாக்கம் குறைந்து மீண்டும் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் டெல்டா வைரஸ் தடுப்பூசி போட்டவர்களையும் தாக்கும் என இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகம் திடுக்கிடும் தகவல் ஒன்றினை தெரிவித்துள்ளது.
டெல்டா வைரஸ்:
கொரோனா தொற்றானது முதல் அலை மற்றும் இரண்டாம் அலை என நாடு முழுவதும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இதனை தொடர்ந்து ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு நோய் தொற்று பரவும் விகிதம் குறைக்கப்பட்டது. தற்போது நோய் தொற்று பரவும் விகிதம் படிப்படியாக அதிகரித்து வருகிறது. இதுகுறித்து சோதனை மேற்கொள்ளப்பட்டதில் தடுப்பூசி செலுத்தி கொண்டவர்களுக்கும் டெல்டா வைரஸ் பரவும் என கண்டறியப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கணினி மையங்களுக்கு எச்சரிக்கை – மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!!
ஐசிஎம்ஆர் எனப்படும் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகம் சென்னையில் ஆய்வு ஒன்றை நடத்தியது. அதில் டெல்டா வைரஸ் குறித்து மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் இறுதியில் தடுப்பூசி செலுத்தி கொண்டவர்களுக்கும் டெல்டா வைரஸ் பரவும் என திட்டவட்டமாக கூறப்பட்டுள்ளது. ஆனால் முதல் அலையை காட்டிலும் இறப்பு விகிதம் குறைந்துள்ளதாகவும் ஆய்வின் முடிவில் தெரிவிக்கப்பட்டது. அரசு கூறிய பாதுகாப்பு நடவடிக்கைகளை மக்கள் கடைபிடிப்பதன் மூலம் டெல்டா வைரஸ் பரவாமல் தடுக்க முடியும் என்றும் ஐசிஎம்ஆர் கழகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
TN Job “FB Group” Join Now
ஐசிஎம்ஆர் அறிவிப்பின்படி, கொரோனா பரிசோதனைக்கு 50 கோடி என மைல்கல் அமைத்திருந்த நிலையில் அதை அடைந்து விட்டதாகவும் கூறப்படுகிறது. தற்போது கடந்த 55 நாட்களில் 10 கோடி மக்கள் கொரோனா பரிசோதனை செய்து கொண்டது குறிப்பிடத்தக்கது. நாடு முழுவதும் 24 மணி நேரத்தில் 34,401 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு இருப்பதாகவும் 530 பேர் இறந்துள்ளதாகவும் அறிக்கை கூறுகிறது. மேலும் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக 56.64 கோடி தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளது எனவும் ஒன்றிய அரசு அறிவித்துள்ளது.