தமிழகத்தில் தீவிரமெடுக்கும் டெல்டா பிளஸ் கொரோனா – 3 பேர் பாதிப்பு!

0
தமிழகத்தில் தீவிரமெடுக்கும் டெல்டா பிளஸ் கொரோனா - 3 பேர் பாதிப்பு!
தமிழகத்தில் தீவிரமெடுக்கும் டெல்டா பிளஸ் கொரோனா - 3 பேர் பாதிப்பு!
தமிழகத்தில் தீவிரமெடுக்கும் டெல்டா பிளஸ் கொரோனா – 3 பேர் பாதிப்பு!

தமிழகத்தில் தற்போது கொரோனா வைரஸ் தொற்று உருமாறி டெல்டா பிளஸ் வகை வைரஸாக பரவி வருகிறது. தற்போது வரை தமிழகத்தில் 3 பேர் டெல்டா பிளஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அவர்கள் தெரிவித்துள்ளார்.

டெல்டா பிளஸ் கொரோனா:

தமிழகத்தில் சுமார் கடந்த மூன்று மாத காலத்திற்கு மேலாக கொரோனா வைரஸ் தொற்று இரண்டாம் அலையாக உருவெடுத்து பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. கொரோனா தொற்றின் முதல் அலையை விட தற்போது வீசும் இரண்டாம் அலையில் அதிக பாதிப்பு காணப்பட்டு வருகிறது. மேலும் கொரோனா வைரஸ் தொற்று இரண்டாம் அலையாக உருவெடுத்ததற்கு டெல்டா வகை கொரோனா முக்கிய காரணம் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.

தமிழக அரசின் சுதந்திர தினவிழா விருது – மாவட்ட ஆட்சியர் முக்கிய அறிவிப்பு!

இந்நிலையில் தற்போது டெல்டா வகை கொரோனா தொற்று உருமாறி டெல்டா பிளஸ் கொரோனா தொற்றாக பரவி வருகிறது. இதனால் மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். தற்போது தமிழகத்தில் ஏற்பட்டுள்ள டெல்டா பிளஸ் பாதிப்பு குறித்து தமிழக நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அவர்கள் தகவல் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது, தமிழகத்தில் முதன்முறையாக வைரஸ் பகுப்பாய்வு மையம் தொடங்கப்படவுள்ளது. பரிசோதனை செய்யப்பட்ட மாதிரிகளை பெங்களூருவுக்கு அனுப்பி பரிசோதனை முடிவுகள் வருவதற்கு தாமதம் ஏற்படுகிறது.

SBI வங்கி வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு – ஜூலை 1 முதல் வரப்போகும் மாற்றங்கள்!

இதனால் ஐசிஎம்ஆர் வழிகாட்டுதலின்படி மாநில அரசு இதை செய்து வருகிறது. எதிர்காலத்தில் டெல்டா பிளஸ் பாதிப்பு அதிகமாக கூடாது என்பதற்காக சென்னையில் புதிய பகுப்பாய்வு மையத்தை நிறுவ தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் உத்தரவிட்டுள்ளார். தற்போது அதற்கான பணிகள் தொடங்கியுள்ளன. தமிழகத்தில் தற்போது வரை 3 பேருக்கு டெல்டா பிளஸ் கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இவர்களுக்கு கொரோனா தொற்று சிகிச்சைக்கு அளிக்கப்படும் அதே சிகிச்சைதான் மேற்கொள்ளப்படுகிறது என்றும் தமிழகத்தில் தற்போது வழங்கப்படும் தடுப்பூசியே டெல்டா பிளஸ் தொற்றை கட்டுக்குள் வைத்திருக்கும் என்றும் அமைச்சர் மா.சுப்பிரமணியன் அவர்கள் தெரிவித்துள்ளார்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!