3 மாநிலங்களில் வேகமாக பரவும் டெல்டா + கொரோனா – மத்திய அரசு எச்சரிக்கை!

0
3 மாநிலங்களில் வேகமாக பரவும் டெல்டா + கொரோனா - மத்திய அரசு எச்சரிக்கை!
3 மாநிலங்களில் வேகமாக பரவும் டெல்டா + கொரோனா - மத்திய அரசு எச்சரிக்கை!
3 மாநிலங்களில் வேகமாக பரவும் டெல்டா + கொரோனா – மத்திய அரசு எச்சரிக்கை!

புதிய வகையான டெல்டா பிளஸ் வைரஸ் தொற்று நாட்டில் 3 மாநிலங்களில் வேகமாக பரவி வருவதாக மத்திய அரசு எச்சரித்துள்ளது.

டெல்டா பிளஸ்:

நாடு முழுவதும் கொரோனா தொற்றின் இரண்டாம் அலை அதிக அளவில் பரவி பாதிப்புகளை ஏற்படுத்திய நிலையில், மத்திய மற்றும் மாநில அரசுகளின் தீவிர முயற்சியினால் தற்போது தான் மெல்ல தொற்றின் தாக்கம் குறைந்து வருகிறது. இந்த வகை தொற்றினால் ஏற்பட்டுள்ள பாதிப்புகளில் இருந்து மீளுவதற்கே இன்னும் சில வருடங்கள் ஆகலாம். இந்நிலையில் புதிய வகை வைரஸ் தொற்று குறித்து மத்திய அரசு எச்சரித்துள்ளது.

தமிழகத்தில் ஊரடங்கில் புதிய தளர்வுகள் அறிவிப்பு – இயல்பு நிலையில் சென்னை!

மகாராஷ்டிரா, கேரளா மற்றும் மத்திய பிரதேசம் ஆகிய 3 மாநிலங்களில் டெல்டா பிளஸ் என்ற புதிய வைரஸ் வேகமாக பரவி வருவதாக கண்டறியப்பட்டுள்ளது. இதனால் இங்கு கட்டுப்பாட்டு பணிகளை தீவிரப்படுத்த வேண்டும் என்று மத்திய அரசு எச்சரித்துள்ளது. இந்த வைரஸ் மனிதர்களின் உடலுக்குள் புகுந்து செல்லும் திறன் கொண்டது என்றும் எனவே எதிர்ப்பு சக்தி மிகுந்தவர்களாக இருந்தாலும் இந்த புதிய டெல்டா பிளஸ் வைரஸ் எளிதில் பாதிப்பை ஏற்படுத்தும் என்று கூறியுள்ளது.

TN Job “FB  Group” Join Now

அடுத்து வரும் மூன்று அல்லது நான்கு மாதங்களில் கொரோனா வைரஸின் இரண்டாவது அலையினால் ஏற்பட்ட பாதிப்பை விட அதிக அளவிலான பாதிப்பை இந்த வைரஸ் ஏற்படுத்தும் என்று எய்ம்ஸ் இயக்குனர் எச்சரித்துள்ளார். எனவே முதலில் இந்த மூன்று மாநிலங்கள் மற்றும் அதனை தொடர்ந்து மற்ற அனைத்து மாநிலங்களிலும் டெல்டா பிளஸ் வைரஸ் குறித்து கவனமாக இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!