ஏப்ரல் 30 வரை பல்கலைக்கழகத்திற்கு விடுமுறை – அறிவிப்பு வெளியீடு!!
கொரோனா இரண்டாம் அலை காரணமாக டெல்லியில் உள்ள ஜாமியா ஹம்தர்த் பல்கலைக்கழகம் ஏப்ரல் 30 வரை விடுமுறை அறிவித்துள்ளது. ஆன்லைன் மூலம் வகுப்புகள் மற்றும் முக்கிய பணிகள் தொடரும் என பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.
பல்கலைக்கழகம் விடுமுறை:
கொரோனா இரண்டாம் அலை தற்போது வேகமெடுத்து பரவி வருகிறது. இந்தியாவின் பல மாநிலங்கள் கொரோனா உயிர்கொல்லி நோயை எதிர்த்து போராடி வருகிறது. தலைநகரான டெல்லியில் பாதிப்பு எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரிக்கிறது.
நாடு முழுவதும் இரவு நேரங்களில் 144 தடை உத்தரவு – மத்திய அரசு அனுமதி!!
கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் தலைநகர் டெல்லியில் 22,93 பேர் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 319 பேர் உயிரிழந்துள்ளனர். அதிகரித்து வரும் தொற்றை கட்டுப்படுத்த அம்மாநில அரசு மே 3 வரை ஊரடங்கை நீட்டித்து உள்ளது. மேலும் 18 வயதுக்கு மேற்பட்டோர்க்கு இலவச கொரோனா தடுப்பூசி அளிக்கப்படும் எனவும் அறிவித்துள்ளது.
TN Job “FB Group” Join Now
இதனை தொடர்ந்து டெல்லியில் உள்ள ஜாமியா ஹம்தர்த் பல்கலை நிர்வாகம் கொரோனா தொற்று பரவல் காரணமாக ஏப்ரல் 30 வரை பல்கலைக்கழகதிற்கு விடுமுறை அறிவித்துள்ளது. மேலும் வகுப்புகள் ஆன்லைன் மூலம் தொடர்ந்து நடைபெறும் எனவும் அட்டவணையின் படி தேர்வுகள் நடைபெறும். அதுமட்டுமின்றி பல்கலைக்கழகத்தின் முக்கிய பணிகள் அனைத்தும் ஆன்லைன் வழியாக நடைபெறும் எனவும் ஜாமியா ஹம்தத்ர் பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.