டெல்லி சுல்தானியம்

0
டெல்லி சுல்தானியம்

இந்தியாவின்மீது முஸ்லீம்கள் நடத்திய படையெடுப்புகளின் விளைவாக டெல்லிசுல்தானியம் நிறுவப்பட்டது. அது கி.பி. 1206 முதல் 1526 ஆம் ஆண்டுவரை நீடித்தது. ஐந்து வெவ்வேறு வம்சங்கள் – அடிமை, கில்ஜி, துக்ளக், சையது, லோடி – டெல்லி சுல்தானியத்தை ஆட்சி செய்தன. வட இந்தியா முழுவதையும் கைப்பற்றியதோடு நிற்காமல், அவர்கள் தக்காணத்திலும் தென்னிந்தியாவிலும் நுழைந்தனர். இந்தியாவில் அவர்களது ஆட்சி, சமூகம், ஆட்சித் துறை மற்றும் பண்பாட்டு நிலைமைகளில் பெருத்த மாற்றங்களை ஏற்படுத்தின.அடிமை வம்சம் மாம்லுக் வம்சம் என்றும் அழைக்கப்படுகிறது. மாம்லுக் வம்சம் என்ற குர்ஆன் சொல்லுக்கு அடிமை என்று பொருள். கி.பி. 1206 முதல் 1290 ஆம் ஆண்டுவரை அடிமை வம்சம் டெல்லியில் ஆட்சிபுரிந்தது. இக்காலத்தில் மூன்று மரபுகள் ஏற்படுத்தப்பட்டன. அவை
1. குத்புதீன் ஐபக் நிறுவிய குத்பி மரபு (1206 – 1211).
2. இல்துத்மிஷ் நிறுவிய முதல் இல்பாரி மரபு (1211 – 1266)
3. பால்பன் நிறுவிய இரண்டாவது இல்பாரி மரபு (1266 – 1290)

குத்புதீன் ஐபக் (1206 – 1211)

  • கோரி முகமதுவிடம் அடிமையாக இருந்தவர் குத்புதீன் ஐபக். கோரி முகமது அவரை இந்தியப் பகுதிகளுக்கு ஆளுநராக நியமித்தார். டெல்லிக்கு அருகிலுள்ள இந்திரபிரஸ்தம் என்ற இடத்தில் ஐபக் தனது ராணுவ நிலையத்தை அமைத்துக் கொண்டார்.
  • கோரியின் வாழ்நாளிலேயே ஐபக் ஒரு நிலையான படையைத் திரட்டியதோடு, வட இந்தியாவில் தமது ஆதிக்கத்தையும் நிலைப்படுத்திக் கொண்டார். 1206 ஆம் ஆண்டு கோரி இறந்தவுடன், ஐபக் தனது சுதந்திரத்தை அறிவித்துக் கொண்டார்.
  • கோரி அரசுடனான அனைத்து உறவுகளையும் துண்டித்துக் கொண்டார். இவ்வாறுää அடிமை வம்சத்திற்கும் டெல்லி சுல்தானியத்திற்கும் ஐபக் அடிகோலினார். சுல்தான் என்ற பட்டத்தைச் சூட்டிக் கொண்ட அவர் லாகூரை தலைநகராக்கினார்.
  • அவரது ஆட்சி நான்கு ஆண்டுகளே நீடித்தது. முஸ்லிம் எழுத்தாளர்கள் ஐபக்கை ‘லாக் பக்ஷ்’ என அழைக்கின்றனர். அவர்களுக்கு தாராளமாக கொடைகளை வழங்கியதால் அவ்வாறு அழைக்கப்பட்டார்.
  • ஹசன் நிசாமி என்ற சிறந்த அறிஞரை ஐபக் ஆதரித்தார். சூஃபித்துறவி குவாஜா குத்புதீன் பக்தியார் என்பவரின் பெயரில் அவர் குதுப்மினாரை கட்டத் தொடங்கினார். பின்னர் அது இல்துத்மிஷ் காலத்தில் கட்டி முடிக்கப்பட்டது.
  • 1210 ஆம் ஆண்டு குதிரைப் போலோ விளையாட்டில் ஈடுப்பட்டிருந்தபோது ஐபக் தவறி விழுந்து இறந்தார். அடுத்து அவரது மகன் ஆரம் பக்ஷ் ஆட்சிப் பொறுப்பேற்றார். எட்டு மாதங்களுக்குப் பிறகு இல்துத்மிஷ் அவரை அகற்றிவிட்டு டெல்லி சுல்தானாகப் பதவியேற்றார்.

இல்துத்மிஷ் (1211 – 1236)

  •  இல்பாரி குலத்தைச் சேர்ந்தவர் இல்துத்மிஷ். எனவே அவரது அரசு குலம் இல்பாரி குலம் எனப்பட்டது. அவரது ஒன்றுவிட்ட சகோதரர்களால் ஐபக்கிடம் அடிமையாக விற்கப்பட்டவர் இல்துத்மிஷ். ஐபக் தமது மகளை அவருக்கு திருமணம் செய்துவைத்து மருமகனாக்கிக் கொண்டார். பின்னர்ää அவரை குவாலியரின் இக்தாதார் பதவியிலும் அமர்த்தினார்.
  • 1211ல் இல்துத்மிஷ் ஆரம் பக்ஷை விரட்டிவிட்டு சுல்தானாக பதவியேற்றார். லாகூரிலிருந்த தலைநகரை அவர் டெல்லிக்கு மாற்றினார். அவரது ஆட்சியின் முதல் பத்து ஆண்டுகள் தமது அரியணையை போட்டியாளர்களிடமிருந்து பாதுகாத்துக் கொள்வதிலேயே கழிந்தது.
  • இதற்கிடையில் மங்கோலியர்களின் தலைவனான செங்கிஸ்கான் என்று அனைவராலும் அழைக்கப்படும் தெமுஜின் மத்திய ஆசியாமீது படையெடுப்பைத் தொடங்கியிருந்தார். அங்கு குவாரிசம் ஆட்சியாளரான ஜலாலுதீன் மங்கபர்னி என்பவரை முறியடித்தார். சிந்து நதியைக் கடந்து இந்தியாவிற்குள் ஓடிவந்த மங்கபர்னி இல்துத்மிஷிடம் புகலிடம் கேட்டார்.
  • மங்கோலியரிடமிருந்து இந்தியாவைக் காப்பாற்றுவதற்காக மங்கபர்னிக்கு புகலிடம் கொடுக்க இல்துத்மிஷ் மறுத்தார். நல்ல வேளையாக, செங்கிஸ்தான் இந்தியாவிற்குள் படையெடுத்து வராமல் திரும்பிச் சென்றார். இல்துத்மிஷ் பின்பற்றிய திறமையான மங்கோலியக் கொள்கையால்,இந்தியா செங்கிஸ்கானின் சூறைக்குத் தப்பியது.
  • வங்காளம் பீகார் மீது படையெடுத்த இல்துத்மிஷ் அங்கு தமது கட்டுப்பாட்டை உறுதிப்படுத்திக் கொண்டார்.
  • சிந்து, முல்தான் பகுதிகளையும் டெல்லி சுல்தானியத்துடன் இணைத்தார். ரஜபுத்திரர்களின் கிளர்ச்சிகளை ஒடுக்கிய அவர் ராந்தம்பூர், ஜாலோர், ஆஜ்மீர், குவாலியர் போன்ற அரசுகளை மீண்டும் கைப்பற்றினார். மாளவத்தின் பரமாரர்களுக்கு எதிராக அவர் மேற்கொண்ட படையெடுப்பு பலனளிக்கவில்லை
  • இல்துத்மிஷ் சிறந்த ஆட்சியாளர். 1229 ஆம் ஆண்டு காலிப்பிடம் இருந்து அனுமதிப்பத்திரத்தைப் பெற்று அவர் இந்தியாவின் சட்ட முறையான ஆட்சியாளரானார். பின்னர் தமது வாரிசாக ரசியா என்ற தனது மகளை அவர் நியமித்தார்.
  • டெல்லி சுல்தானியத்திற்கு பரம்பரை வாரிசு முறையை இவ்வாறு இல்துத்மிஷ் தொடங்கி வைத்தார். அவரது ஆட்சிக் காலத்தில் இந்தியாவுக்கு வந்த அறிஞர்களையும் சூஃபி துறவிகளையும் இல்துத்மிஷ் ஆதரித்தார்.
  • மின்ஹஜ் – உஸ் – சிராஜ், தாஜீதின், நிசாம் உல் முல்க் முகமது ஜெய்னதி, மாலிக் குத்புதீன் ஹசன், பக்ருல் முல்க் ஈசாமி போன்றோர் அவரது காலத்தில் வாழ்ந்து அவரது அவையை அலங்கரித்த அறிஞர்கள்.
  • இந்தியாவின் மிக உயர்ந்த கட்டிடமான (238 அடி) குதுப்மினாரை கட்டிமுடித்த அவர் ஆஜ்மீரில் அழகிய மசூதி ஒன்றையும் கட்டினார். இந்தியாவில் அராபிய நாணய முறையை அறிமுகப்படுத்தியவர் இல்துத்மிஷ்.
  • 175 கிராம் எடைகொண்ட வெள்ளி தாங்கா என்ற அவரது நாணயம் இடைக்கால இந்தியா முழுவதும் ஏற்கப்பட்டது. தற்காலத்திய ரூபாய்க்கு அவரது வெள்ளி நாணயமே அடிப்படை என்று கூறலாம். வலிமை வாய்ந்த நாற்பது படைத் தலைவர்கள் கொண்ட நாற்பதின்மர்குழு ஒன்றையும் இல்துத்மிஷ் உருவாக்கினார்.

ரசியா (1236 – 1240)

  • இல்துத்மிஷ் தனது புதல்வி ரசியாவை அரியணைக்கு வாரிசாக நியமித்திருந்தார்.ஆனால் டெல்லியின் காஸி மற்றும் வாசிர் இருவரும் ருக்னுதுதீனு; பிரோஸ் என்பவரை அரியணையில் அமர்த்தினர். முல்தானில் நடைபெற்ற கலகத்தை ஒடுக்குவதற்கு ருக்னுதீன் சென்றார். அத்தருணத்தை பயன்படுத்திக் கொண்ட ரசியா டெல்லியின் அமீர்கள் ஆதரவோடு அரியணையைக் கைப்பற்றிக் கொண்டார்.
Download TNPSC அரசியலமைப்பு பாடக்குறிப்புகள்
  • அபிசீனிய அடிமையான யாகூத் என்பவரை குதிரைப் படைத் தலைவனாகவும் நியமித்தார். ஆணுடை தரித்து அரசவையில் ரசியா அமர்ந்தார் வேட்டைக்குச் செல்வது படைநடத்துவது உள்ளிட்ட செயல்களிலும் ரசியா ஈடுப்பட்டார். இதனைக் கண்டு துருக்கிய உயர்குடியினர் வெகுண்டனர்.
  • 1240 ஆம் ஆண்டு அல்தூனியா என்ற படிண்டாவின் ஆளுரர் ரசியாவுக்கெதிராக கிளர்ச்சியிலீடுப்பட்டார்.
  • ரசியா தானே படைநடத்திச் சென்று கிளர்ச்சியை நசுக்க முற்பட்டார். ஆனால் அல்தூனியா யாகூத்தைக் கொன்று ரசியாவை சிறைப்படுத்தினார். இதற்கிடையில் துருக்கிய உயர்குடியினர் இல்துத்மிஷின் மற்றொரு மகனான பஹ்ரம் என்பவரை அரியணையில் அமர்த்தினர்.
  • சிறையிலிருந்த ரசியா அல்தூனியயாவின் அன்பைப் பெற்று அவரது துணையோடு டெல்லி நோக்கி சென்றார். ஆனால் ரசியா தோற்கடிக்கப்பட்டு கொல்லப்பட்டார்.
  • ரசியாவின் வீழ்ச்சி நாற்பதின்மர் குழுவின் எழுச்சிக்கு வழிவகுத்தது. அடுத்த ஆறு ஆண்டுகள் பஹ்ரம் மற்றும் மசூத் இருவரும் டெல்லியை ஆண்டனர். சுல்தான்களுக்கும் உயர்குடியினருக்குமிடையே பூசல்கள் தோன்றின. 1245ல் பால்பன் இல்துத்மிஷின் இளைய மகனான நசிருதீனு; முகமதுவை சுல்தானாக நியமித்தார்.

பால்பனது ஆட்சிக்காலம் (1246 – 1287)

  • உலுக்கான் என்றழைக்கப்பட்ட பால்பன் சுல்தான் நசிருதீன் முகமதுவின் நாயப் அல்லது அரசப் பிரதியாக செயல்பட்டார். தனது மகளை சுல்தானுக்கு மணமுடித்துக் கொடுத்து அவரது வலிமையையும் பெருக்கிக் கொண்டார்.
  • ஆட்சித்துறையை பால்பன் தமது கட்டுப்பாட்டில் வைத்திருந்தார். இருப்பினும் அரசவையில் அவருக்கு பலத்த எதிர்ப்பு இருந்தது. அவற்றை அவர் சாமர்த்தியமாக முறியடித்தார்.
  • 1266ல் நசிருதீன் முகமது வாரிசு ஏதுமின்றி இறந்துவிடவே பால்பன் அரியணையேறினர்.
  • அரசப் பிரதியாக செயல்பட்ட அனுபவம் பால்பனுக்கு டெல்லி சுல்தானியத்தின் பிரச்சனைகளைப் புரிந்துகொள்ள ஏதுவாயிற்று. நாற்பதின்மர் குழுவிலிருந்த உயர்குடியினரே தமக்கு எதிரிகள் என்பதை அவர் உணர்ந்திருந்தார்.
  • சுல்தானின் அதிகாரத்தையும், மதிப்பையும் கூட்டுவதன் மூலமே பிரச்சைகளுக்குத் தீர்வு காண முடியும் என அவர் நம்பினார்.
  • பால்பனது கருத்துப்படி ‘அரசன் இறைவனது நிழல் போன்றவன்;’, ‘இறைவனால் பூமிக்கு அனுப்பி வைக்கப்பட்டவன்’ – எனவே பால்பன் தீவிரமான அரசவை நடைமுறைகளை அறிமுகப்படுத்தினார்.
  • சுல்தான் முன்பு மண்டியிட்டு வணங்கி காலைத் தொட்டு முத்தமிடுதல் என்;ற வழக்கத்தை பின்பற்றச் செய்தார். இதனால் உயர் குடியினரைவிட சுல்தான் உயர்ந்தவர் என்பது உணர்த்தப்பட்டது.
  • தனது செல்வத்தையும் வலிமையையும் உயர்குடியினருக்கும் மக்களுக்கும் எடுத்துக்காட்டும் விதத்தில் நவ்ரோஸ் என்ற பாரசீகத் திருவிழாவையும் ஆடம்பரமாக அவர் கொண்டாடினார்.
  • துருக்கிய உயர்குடியினரின் நலன் நாடுபவராக அவர் திகழ்ந்தார். பிற உயர்குடியினருடன் அதிகாரத்தை பகிர்ந்து கொள்ள தயாராக இல்லை.
  • இந்திய முஸ்லிம்களுக்கு அரசாங்கத்தின் முக்கிய பதவிகளை அவர் வழங்கவில்லை. உயர்குடியினரின் நடவடிக்கைகளை கண்காணிப்பதற்கு ஒற்றர்களையும் பால்பன் நியமித்தார்.
  • துருக்கிய உயர்குடியினர் இடம் பெற்றிருந்த நாற்பதின்மர் குழுவை ஒழிக்க அவர் முடிவுசெய்தார். தனக்குக் கீழ்ப்படிந்தவர்களை மட்டும் விட்டுவிட்டு பிறரை ஒழித்துக் கட்டினார்.
  • பதுவான் மாகாண ஆளுநரான மாலிக் பக்பக் என்பவரை அவரது பணியாளர்களைத் துன்புறுத்தினார் என்ற காரணத்திற்காக பொது இடத்தில் வைத்து சவுக்கடி கொடுத்தார்.
  • அயோத்தியின் ஆளுநரான ஹேபத்கான் குடிபோதையிலிருந்தவனைக் கொன்றான் என்ற காரணத்துக்காக தண்டித்தார். படிண்டாவின் ஆளுநர் ஷெர்கான் விஷம் வைத்துக் கொல்லப்பட்டார். பால்பன் தனது அரசை விரிவுப்படுத்துவதற்குப் பதில் சட்டம் ஒழுங்கை நிலைநாட்டுவதிலேயே அதிக கவனம் செலுத்தினார்.
  • திவானி அர்ஸ் என்ற ராணுவத் துறையை ஏற்படுத்தி ராணுவ நிர்வாகத்தை சீரமைத்தார். மேவாடிஸ் என்ற கொள்ளையர்களால் டெல்லியின் புறநகர் பகுதிகள் அடிக்கடி சூறையாடப்பட்டன. பால்பன் அவர்களுக்கெதிராக கடும் நடவடிக்கை எடுத்து கொள்ளைகளைத் தடுத்தார்.
  • கொள்ளையர்கள் ஈவிரக்கமின்றி கொல்லப்பட்டனர். இதனால் பயணம் செய்வோருக்கு சாலைகள் பாதுகாப்புமிக்கதாகத் திகழ்ந்தன.
  • 1279 ஆம் ஆண்டு வங்காள ஆளுநர் துக்ரில்கான் பால்பனுக்கு எதிராக கிளர்ச்சியில் ஈடுப்பட்டார். அக்கிளர்ச்சி ஒடுக்கப்பட்டு அவரது தலை துண்டிக்கப்பட்டது. வடமேற்கு இந்தியாவில் மங்கோலியர்கள் மீண்டும் படையெடுத்து வந்தனர்.
  • பால்பன் தனது மகன் இளவரசன் முகமது தலைமையிலான படைகளை மங்கோலியருக்கெதிராக அனுப்பி வைத்தார். ஆனால் முகமது போரில் கொல்லப்பட்டார். இந்நிகழ்ச்சி பால்பனுக்கு துயரத்தைக் கொடுத்தது.
  • 1287ல் பால்பன் இறந்தார். டெல்லி சுல்தானியத்தின் எழுச்சிக்கு பால்பன் ஆற்றிய பங்கு மகத்தானது. முடியாட்சியின் வலிமையை அவர் பெருக்கினார். இருப்பினும் மங்கோலியப் படையெடுப்புகளிலிருந்து இந்தியாவை அவரால் முழுமையாக காப்பாற்ற முடியவில்லை
  • பால்பன் மறைந்தவுடன் அவரது பேரன்களில் ஒருவரான கைக்குபாத் டெல்லி சுல்தானாக நியமிக்கப்பட்டான்.
  • அவனது நான்கு வருடகால திறமையற்ற ஆட்சிக்குப்பின் 1290 ஆம் ஆண்டு டெல்லி அரியணையை ஜலாலுதீனு; கில்ஜி கைப்பற்றினார்.

கில்ஜி வம்சம் (1290 – 1320)

  • இந்தியாவில் முஸ்லீம் பேரரசு அதன் உச்சகட்டத்தை தொட்டது கில்ஜிகளின் ஆட்சிக் காலத்தில்தான். கில்ஜி வம்சத்தை நிறுவியவர் ஜலாலுதீன் கில்ஜி. ஆட்சிக்கு வந்தபோது அவருக்கு வயது எழுபது. கருணை மனம் படைத்தவர்.
  • பால்பனின் மருமகனான மாலிக் சஜ்ஜீ என்பவரை காராவின் ஆளுநராக தொடர்ந்து இருக்க அவர் அனுமதித்தார். அவரது தாரளமனதை சஜ்ஜீ தவறாகப் புரிந்து கொண்டார். சஜ்ஜீ கலகத்தில் இறங்கியபோது கலகத்தை ஒடுக்கிய ஜலாலுதீன் அவரை மன்னிக்கவும் செய்தார்.
TNPSC சைவம் & வைணவம் பாடக்குறிப்புகள் Download
  • தக்கர்கள் நாட்டை கொள்ளையடித்து வந்தனர். அவர்களைக் கைப்பற்றிய சுல்தான் எச்சரித்து, மன்னித்து, விடுதலை செய்தார்.
  • 1292ல் மாலிக் சஜ்ஜீ இரண்டாம் முறையாக கிளர்ச்சியிலீடுபட்டபோது அவரை நீக்கிவிட்டு, தனது மருமகன் அலாவுதீன் கில்ஜியை காராவின் ஆளுநராக நியமித்தார்.
  • 1296ல் அலாவுதீன் கில்ஜி தேவகிரிமீது படையெடுத்து ஏராளமான செல்வத்துடன் காரா திரும்பினார். அப்போது அவருக்கு அளிக்கப்பட்ட வரவேற்பில் கலந்து கொண்ட மாமனாரும் சுல்தானுமான ஜலாலுதீன் கில்ஜியை சதிசெய்து கொன்றுவிட்டு அலாவுதீன் கில்ஜி டெல்லி அரியணையக் கைப்பற்றினார்.

அலாவுதீனு; கில்ஜி (1296 – 1316)

  • டெல்லிக்கு வந்த அலாவுதீன் கில்ஜி தம்மை வெறுத்த உயர்குடியினருக்கும் டெல்லி அமீர்களுக்கும் ஏராளமான செல்வத்தை வாரிக் கொடுத்து அவர்களை தம்பக்கம் சாய்த்துக் கொண்டார். எஞ்சிய எதிர்ப்பாளர்களை கடுமையாக தண்டித்தார்.
  • உயர்குடியினரின் நடவடிக்கைகளை ஒழுங்கு படுத்துவதற்கு அவர் விதிமுறைகளை வகுத்தார்.
  • அவர்களிடமிருந்த அளவற்ற செல்வம், உயர்குடியினருக்கிடையே அளவற்ற செல்வம், உயர்குடியினருக்கிடையே காணப்படும் மண உறவுகள், திறமையற்ற ஒற்றர்முறை, மது அருந்துதல் போன்றவையே கிளர்ச்சிகளுக்கு அடிப்படைக் காரணங்கள் என்று அலாவுதீன் கில்ஜி கருதினார்.
  • எனவே அவர் நான்கு அவசர ஆணைகளை பிறப்பித்தார். உயர்குடியினரின் சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டன. ஒற்றர்முறையை செம்மையாக சீரமைத்தார். உயர் குடியினரின் ரகசிய நடவடிக்கைகள் அனைத்தும் உடனடியாக சுல்தானின் கவனத்திற்கு வரும்படி செய்தார். மது விற்பனையும், போதை மருந்தும் தடை செய்யப்பட்டன.
  • சுல்தானின் அனுமதியின்றி விழாக்களும் கேளிக்கைகளும் நடத்துவதற்கு தடைவிதிக்கப்பட்டன. இத்தகைய கடும் நடவடிக்கைகளினால் அவரது ஆட்சிக் காலத்தில் கிளர்ச்சிகள் தவிர்க்கப்பட்டன.

துக்ளக் வம்சம் (1320 – 1414)

  • கியாசுதீன் துக்ளக் இவ்வம்சத்தை நிறுவியவர். அவர் தனது மகன் ஜீனாகான் என்பவரை வாரங்கல்லுக்கெதிராக படையுடன் அனுப்பி வைத்தார்.
  • பிரதாபருத்ரனை முறியடித்து பெரும் பொருளுடன் ஜீனாகான் நாடு திரும்பியவுடன் தனது தந்தையை சதி செய்து கொன்றுவிட்டு 1325 ஆம் ஆண்டு முகமது பின் துக்ளக் என்ற பட்டத்துடன் அரியணையேறினார்.
  • கியாசுதீன் தனது ஆட்சிக் காலத்தில் டெல்லிக்கு அருகில் துக்ளகாபாத் நகருக்கு அடிகோலினார்.

முகமது பின் துக்ளக் (1325 – 1351)

  • இடைக்கால இந்திய வரலாற்றில் தனிச்சிறப்பான குணம் கொண்டவராக முகமது பின் துக்ளக் விளங்கினார்.
  • அவரது பேரவாமிக்க திட்டங்களும் புதிய பரிசோதனைகளும் பெரும் தோல்வியடைந்தன. ஏனெனில் அவை அக்காலத்திற்கு ஒவ்வாதிருந்தன.
  • சமய விவகாரங்களில் சகிப்புத் தன்மையுடனேயே அவர் நடந்து கொண்டார். எகிப்து, சீனூ, ஈரான் போன்ற தொலைதூர நாடுகளுடக் அவர் அரசியல் உறவுகளை வைத்திருந்தார்.
  • பல்வேறு நலம் பயக்கும் தாரள சீர்திருத்தங்களையம் அவர் அறிமுகப்படுத்தினார். ஆனால், அவரது அனைத்து சீர்திருத்தங்களும் தோல்வியிலேயே முடிந்தன.
  • அவரது சமகால எழுத்தாளர்களான ஈசாமி, பரானி, இபன் பதூதா போன்றவர்கூட துக்ளக்கின் ஆளுமை குறித்து தெளிவாக குறிப்பிடவில்லை. ஆனால் சிறந்த இலக்கிய, சமய மற்றும் தத்துவக் கல்வி கேள்விகளில் தேர்ச்சி பெற்றிருந்த ஒரே டெல்லி சுல்தான் முகமது பின் துக்ளக்,தலைநகர் மாற்றம்.

சையதுகள் (1414 – 1451)

  • தைமூர் இந்தியாவை விட்டுச் செல்லுமுன்பு, கிசிர்கான் என்பவரை முல்தானின் ஆளுநராக நியமித்திருந்தார்.
  • 1414ல் கிசிர்கான் டெல்லியைக் கைப்பற்றி சையது மரபைத் தோற்றுவித்தார். டெல்லி சுல்தானியத்தை மீண்டும் நிலைப்படுத்த அவர் முயன்றார். ஆனால் முடியவில்லை.
  • 1421ல் அவர் மறைந்தபின் அவரது புதல்வன் முபாரக் ஷா ஆட்சிக்கு வந்தார்.
  • அடுத்து ஆட்சிக்கு வந்த முகமது ஷா தமக்கெதிரான சதிகளை முறியடிப்பதிலேயே காலம் கழித்தார்.
  • அமைச்சர் பஹலுல் லோடி ஆட்சியைப் பிடித்தார்.

லோடிகள் (1451 – 1526)

  • சையதுகளை அடுத்து ஆட்சிக்கு வந்த லோடிகள் ஆப்கானியர்கள். டெல்லியின் முதல் ஆப்கானிய ஆட்சியாளர் பஹ்லுல் லோடி. அவருக்கு முன்பு ஆட்சி செய்த அனைவரும் துருக்கியர்கள். 1489ல் அவர் மறைந்த பின் அவரது மகன் சிக்கந்தர் லோடி ஆட்சிக்கு வந்தார்
  • லோடி ஆட்சியாளர்கள் மூவரில் சிக்கந்தர் லோடியே (1489 – 1517) புகழ்மிக்கவர். பீகார் முழுவதையும் அவர் தமது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவந்தார்.
  • பல ரஜபுத்திரத் தலைவர்களும் அவரால் முறியடிக்கப்பட்டனர். வங்காளத்தை தாக்கி அதன் ஆட்சியாளரை அடிபணியச் செய்தார்.
  • பஞ்சாப் முதல் பீகார் வரை தமது அரசை சிக்கந்தர் லோடி விரிவுபடுத்தினார். அவர் சிறந்த ஆட்சியாளரும்கூட சாலைகள் பல அமைக்கப்பட்டன. நீர்ப்பாசன வசதிகள் மேம்படுத்தப்பட்டன. இத்தகைய நற்குணங்கள் வாய்ந்த அவர் ஒரு சமய வெறியராகவும் இருந்தார்.
  • இந்துக்கள்மீது பல்வேறு கட்டுப்பாடுகளையும் விதித்தார். இருப்பினும்ää லோடி சுல்தான்களில் வலிமையும் அதிகாரமும் பெற்றுத் திகழ்ந்தவர் அவரே.
  • சிக்கந்தர் லோடிக்குப் பிறகு ஆட்சிக்கு வந்த அவரது மூத்த மகன் இப்ராஹிம் லோடி ஆணவமிக்கவர். அரசவையிலேயே உயர்குடியிpனரை அவர் அவமதித்தார். கலகம் செய்தவர்கள் கொல்லப்பட்டனர். அவரது சிற்றப்பத அலாவுதீன் கலகத்தில் ஈடுப்பட்டார்.
  • பஞ்சாபின் ஆளுநராக இருந்த தௌலத்கான் லோடியும் இப்ராஹிம் லோடியால் அவமதிக்கப்பட்டார். மனம் வெறுத்த தௌலத்கான் லோடி இந்தியாமீது படையெடுத்து வரும்படி பாபருக்கு அழைப்பு விடுத்தார்.
    டெல்லிக்கு எதிராக படையெடுத்து வந்த பாபர் 1526 ஆம் ஆண்டு பானிப்பட்டுப் போரில் இப்ராஹிம் லோடியை முறியடித்துக் கொன்றார். ஆப்கானியர்களின் அரச எழுபத்தி ஐந்து ஆண்டுகளே நீடித்தது.

PDF Download

பண்டையக் கால இந்திய வரலாறு பாடக்குறிப்புகள்

WhatsApp Group -ல் சேர –  கிளிக் செய்யவும்

Telegram Channel கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!