ஜனவரி 18 முதல் 10 & 12ஆம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறப்பு – மாநகராட்சி அறிவிப்பு!!
டெல்லி மாநகராட்சியில் உள்ள அனைத்து பள்ளிகளிலும்10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஜனவரி 18 முதல் பள்ளிகளை திறந்து நேரடி வகுப்புகளை தொடங்க அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது. மேலும் பெற்றோரின் சம்மதத்துடன் மாணவர்களை அழைத்து, அனைத்து கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் பின்பற்றுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
பள்ளிகள் திறப்பு:
கொரோனா தொற்று காரணமாக டெல்லியில் கடந்த வருடம் மார்ச் மாதத்தில் இருந்து பள்ளிகள் மூடப்பட்டன. இதனால் மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் நடத்தப்பட்டது. தற்போது பல்வேறு மாநிலங்களில் பள்ளிகள் திறக்கப்பட்டு உள்ள நிலையில், டெல்லியில் வரும் ஜனவரி 18ம் தேதி முதல் 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு நேரடி வகுப்புகளை தொடங்க அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது.
திருவள்ளுவர் திருநாள் & தமிழ் புத்தாண்டு விருதுகள் 2021 – தமிழக அரசு அறிவிப்பு!!
இன்று டெல்லி கல்வி இயக்குனரகம் சார்பில் வெளியிடப்பட்ட ஒரு சுற்றறிக்கையில், “அரசு, அரசு உதவி பெறும் மற்றும் உதவி பெறாத அங்கீகரிக்கப்பட்ட பள்ளிகள் அனைத்தும் 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு ஜனவரி 18, 2021 முதல் நேரடி வகுப்புகளை தொடங்க அனுமதி வழங்கப்படுகிறது. இருப்பினும், மாணவர்களின் பெற்றோரின் ஒப்புதலுடன் மட்டுமே பள்ளிக்கு வர அனுமதிக்க வேண்டும். கட்டுப்பாட்டு மண்டலங்களுக்கு வெளியே உள்ள பள்ளிகள் மட்டுமே மீண்டும் திறக்க அனுமதிக்கப்படும்” என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
10& 12th மாணவர்களுக்கான பள்ளிகள் திறப்பு : அரசின் வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டது
மேலும் கட்டுப்பாட்டு மண்டலங்களில் வாழும் மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் பள்ளிகளுக்கு வர அனுமதிக்கப்பட மாட்டார்கள். மாணவர்கள் புத்தகங்கள் உள்ளிட்ட பிற பொருட்களை ஒருவருக்கொருவர் பகிர்ந்து கொள்ள வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டு உள்ளது. தற்போது பெரும்பான்மையான பள்ளிகள் இந்த முடிவை வரவேற்றுள்ள நிலையில், பல பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளின் பாதுகாப்பு குறித்து இன்னும் அச்சத்தில் இருப்பதாக தெரிவித்தனர்.
Velaivaippu Seithigal 2021
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்