நவம்பர் 15 முதல் ஒரு வாரம் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு – முதல்வர் உத்தரவு!

0
நவம்பர் 15 முதல் ஒரு வாரம் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு - முதல்வர் உத்தரவு!
நவம்பர் 15 முதல் ஒரு வாரம் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு - முதல்வர் உத்தரவு!
நவம்பர் 15 முதல் ஒரு வாரம் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு – முதல்வர் உத்தரவு!

கொரோனா நோய்த்தொற்று பரவல் குறைந்து வரும் நிலையில், தீபாவளி பண்டிகைக்கு பின்னர் தலைநகர் டெல்லியில் காற்று மாசுபாடு மிகப்பெரிய அச்சுறுத்தலாக உருவெடுத்து உள்ளது. இதனை கட்டுப்படுத்தும் நோக்கில் ஒரு வார காலத்திற்கு பள்ளிகளுக்கு விடுமுறை உள்ளிட்ட பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் அமலுக்கு வருவதாக முதல்வர் உத்தரவு பிறப்பித்து உள்ளார்.

காற்று மாசுபாடு:

டெல்லியில் காற்று மாசுபாடு கட்டுக்கடங்காத அளவு அதிகரித்து உள்ளது. மத்திய மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் கூற்றுப்படி, மாலை 6.30 மணியளவில் டெல்லியில் ஒட்டுமொத்த AQI (காற்றின் தர அளவு) 427 ஆக இருந்தது. 400க்கும் அதிகமான AQI அளவீடுகள் ஆபத்தானவையாக கருதப்படுகின்றன. இதற்கு பட்டாசுகள், விவசாய கழிவுகள் எரிப்பு, கட்டுமான பணிகள், வாகனங்களில் இருந்து வெளிவரும் புகைகள் உள்ளிட்டவை முக்கிய காரணமாக உள்ளன. டெல்லியில் காற்று மாசுபாட்டை கட்டுப்படுத்த 2 நாட்கள் ஊரடங்கு கட்டுப்பாடுகளை அமல்படுத்திக் கொள்ள உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கி இருந்தது குறிப்பிடத்தக்கது. தற்போது டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அவர்கள் மாற்று நடவடிக்கைகளை கையில் எடுத்துள்ளார்.

கிழிந்த ரூபாய் நோட்டுகளை வங்கியில் கொடுத்தால் எவ்வளவு பணம் கிடைக்கும்? முழு விபரம் இதோ!

அதன்படி காற்று மாசுபாட்டை கட்டுப்படுத்தும் நோக்கில் பள்ளிகள் திங்கள்கிழமை முதல் விடுமுறை அளிக்கப்பட்டு ஆன்லைன் வகுப்புகளுக்கு மாறும், அனைத்து கட்டுமான நடவடிக்கைகளும் மூடப்படும். மேலும் அரசு ஊழியர்கள் வீட்டிலிருந்தே பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்று முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்தார். இருப்பினும், கட்டுமானப் பணிகள் நவம்பர் 14 முதல் 17 வரை நான்கு நாட்களுக்கு மட்டுமே மூடப்படும் என்றும் கூறப்பட்டு உள்ளது. தனியார் அலுவலகங்கள் முடிந்தவரை WFH விருப்பத்திற்கு செல்ல ஆலோசனை வழங்கப்படும்.

CBSE 10 & 12ம் வகுப்பு மாணவர்கள் கவனத்திற்கு – முதல் பருவத் தேர்வுக்கான நடைமுறைகள் வெளியீடு!

டெல்லி காற்றை சுவாசிப்பது என்பது “ஒரு நாளைக்கு 20 சிகரெட்டுகள் புகைப்பது போன்றது” என்று நீதிமன்றத்தில் அரசே ஒப்புக்கொண்டு உள்ளது குறிப்பிடத்தக்கது. தீபாவளிக்கு முன்பும், பின்பும் டெல்லி, ஹரியானா மற்றும் உத்தரபிரதேச அரசுகளின் உத்தரவுகளை அப்பட்டமாக மீறி, இந்த பகுதிகளில் ஆயிரக்கணக்கானோர் பட்டாசுகளை வெடித்ததே மாசுபாடு விண்ணை முட்டும் அளவிற்கு உயர்ந்ததற்கு காரணமாக உள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!