இன்று முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை – மாநில அரசு அறிவிப்பு!!
நாடு முழுவதும் அதிகரித்து வரும் கொரோனா தொற்று காரணமாக டெல்லியில் இன்று (ஏப்ரல் 20) முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பள்ளிகளுக்கு விடுமுறை:
நாடு முழுவதும் கொரோனா பரவல் இரண்டாம் அலை வீசிக்கொண்டிருக்கிறது. இந்த நோய்த்தொற்று காரணமாக பள்ளி, கல்லூரிகள் என அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு ஆன்லைன் வழியாக பாடங்களும், தேர்வுகளும் நடத்தப்பட்டது. தற்போது அதிகரித்து வரும் கொரோனா சூழலில் +2 மாணவர்களுக்கான பொதுத்தேர்வுகளும் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. மற்ற வகுப்பு மாணவர்களுக்கு தேர்வுகள் இன்றி தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.
TN Job “FB Group” Join Now
இதை தொடர்ந்து தலைநகர் டெல்லியில் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. ஒரு நாளைக்கு 10,000 வரை புதிய பாதிப்புகள் பதிவு செய்யப்படுகிறது. இந்த நிலையில் டெல்லியில் ஒரு வாரம் பொது முடக்கத்தை அறிவித்து அம்மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் உத்தரவிட்டுள்ளார். அதன் படி நேற்று (19-04-2021) துவங்கி அடுத்த வாரம் திங்கள் கிழமை (26-04-2021) வரை பொதுமுடக்கம் அமலில் இருக்கும். முன்னதாக பள்ளி மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு சிபிஎஸ்இ மாணவர்களுக்கு தேர்வுகள் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
ஐடி துறையில் 72,000 பேருக்கு வேலைவாய்ப்பு – டாப் 3 நிறுவனங்கள்!!
டெல்லியில் அதிகரித்து வரும் கொரோனா சூழலில் மாணவர்களுக்கு கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக மே மாதம் 15 ஆம் தேதி முதல் ஜூன் மாதம் 3 ஆம் தேதி வரை பள்ளிகளுக்கு கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டது. இந்த தேதிகள் தற்போது மாற்றியமைக்கப்பட்டுள்ளது. அதன் படி இன்று, (ஏப்ரல் 20) முதல் ஜூன் 9 ஆம் தேதி வரை மாணவர்களுக்கு கோடை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது என டெல்லி பள்ளிக்கல்வித்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.