ஆக்சிஜன் தேவைக்கு இணையத்தில் விண்ணப்பம் – அரசு அறிவிப்பு!!
ஆக்சிஜன் தேவை:
கொரோனா இரண்டாம் அலை இந்தியாவில் பேரதிர்வுகளை ஏற்படுத்தியுள்ளது. தொற்று எண்ணிக்கை மின்னல் வேகத்தில் பரவி வருகிறது. மத்திய, மாநில அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுத்தும் ஏதும் பயனளிக்காமல் தொற்று பரவல் மேலும் அதிகரித்து வருகிறது. பல நாட்டு மருத்துவ நிபுணர்களும் முழு ஊரடங்கை அமல்படுத்தும் படி எச்சரித்து வருகின்றன. மேலும நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிப்பதால் மருத்துவமனை நிரம்பி வழிகிறது.
போதிய மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் கொரோனா சிகிசைக்கு தேவையான முக்கிய மருந்துகள் பற்றாக்குறையால் உரிய நேரத்தில் சிசிக்சை அளிக்க முடியாமல் நோயாளிகள் உயிரிழக்கும் அவல நிலை இந்தியாவில் நிலவுகிறது. வட மாநிலங்கள் கொரோனா தொற்றால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக தலைநகரமான டெல்லி கொரோனா இரண்டாம் அலையால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. மனிதர்களின் உயிர் காக்கும் ஆக்சிஜன் பற்றாக்குறையால் டெல்லியில் தொடர்ந்து உயிரிழப்புகள் ஏற்படுகிறது.
இந்திய பயணிகள் விமானங்களுக்கு தடை – இலங்கை அரசு அறிவிப்பு!!
கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 19,953 பேர் கொரோனா தொற்றிற்கு ஆளாகியுள்ளனர். 338 பேர் உயிரிழந்துள்ளனர். பாதிப்பு எண்ணிக்கை அதிகமாக உள்ளதால் லேசான கொரோனா அறிகுறியுடன் உள்ளவர்கள் தங்கள் வீடுகளிலேயே தனிமைபடுத்தப்பட்டு உள்ளனர். இவர்களுக்கு ஆக்சிஜன் தேவை ஏற்பட்டால் delhi.gov.in என்ற இணையதளத்தில் கொரோனா பரிசோதனை சான்று மற்றும் ஆதார் எண் ஆகிய சான்றுகளை கொண்டு விண்னப்பித்து ஆக்சிஜன் சிலிண்டர்கள் பெற்று கொள்ளலாம் என டெல்லி அரசு தெரிவித்துள்ளது.
Velaivaippu Seithigal 2021
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்