மராத்தா சமூகத்தின் இடஒதுக்கீடு ரத்து – டெல்லி உச்சநீதிமன்றம் தீர்ப்பு!!

0
மராத்தா சமூகத்தின் இடஒதுக்கீடு ரத்து - டெல்லி உச்சநீதிமன்றம் தீர்ப்பு
மராத்தா சமூகத்தின் இடஒதுக்கீடு ரத்து - டெல்லி உச்சநீதிமன்றம் தீர்ப்பு
மராத்தா சமூகத்தின் இடஒதுக்கீடு ரத்து – டெல்லி உச்ச நீதிமன்றம் தீர்ப்பு!!

மராத்தா சமூகத்தினருக்கான கல்வி மற்றும் தொழில் சம்பந்தமாக அறிவிக்கப்பட்டிருந்த 16 சதவீத இட ஒதுக்கீட்டை ரத்து செய்து டெல்லி உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

இட ஒதுக்கீடு:

மஹாராஷ்டிரா மாநிலத்தின் மராத்தா சமூகத்தினருக்கு 16 சதவீத இடஒதுக்கீடு வழங்க 2018ஆம் ஆண்டு சட்டம் நிறைவேற்றப்பட்டது. அதன்படி மராட்டியர்களுக்கு 50% உச்சவரம்பை விட, இடஒதுக்கீடு வழங்க தேவை இல்லை என்று நீதிமன்றம் ஒருமனதாக கூறியது. இது குறித்து உச்ச நீதிமன்றத்தின் அரசியலமைப்பு அமர்வு தெரிவிக்கையில், மராட்டியர்களுக்கான இட ஒதுக்கீட்டில் 50% உச்சவரம்பு அரசியலமைப்பிற்கு விரோதமானது என கருத்து தெரிவித்தது.

மாநிலங்களுக்கு இடையிலான பயணத்திற்கு ‘இது’ தேவையில்லை – மருத்துவ கவுன்சில் அறிவிப்பு!!

இது குறித்து நீதிபதி அசோக் பூஷன் தெரிவிக்கையில், கெய்க்வாட் கமிஷனோ அல்லது உயர்நீதிமன்றமோ மராட்டியர்களுக்கான 50% இட ஒதுக்கீட்டை அதிகப்படுத்துவதற்கான எந்த சூழ்நிலையையும் உருவாக்கவில்லை என்று தெரிவித்துள்ளார். இந்நிலையில் நீதிபதிகள் அமர்வு தெரிவிக்கையில், SEBC சட்டம் மராத்தாக்கள் சமூக மற்றும் பொருளாதார ரீதியாக பின்தங்கிய வர்க்கமாக இருப்பதால், அதன் சமத்துவ கொள்கைகளை மீறுவதாக குற்றம் சாட்டியுள்ளது.

TN Job “FB  Group” Join Now

மேலும் மராத்தா சமூகத்தினருக்கு கல்வி, வேலை இட ஒதுக்கீட்டையும் தாக்கி கருத்து தெரிவித்தது. முன்னதாக மராட்டியர்களுக்கு கல்வி மற்றும் தொழிலில் 16% இடஒதுக்கீடு இருந்தது. பின்பாக மராத்தா கோட்டாவின் படி, இந்த இடஒதுக்கீடு 68% உயர்த்தப்பட்டது. பிறகு 2019ஆம் ஆண்டு ஜூன் மாதம் நீதிமன்ற அரசியலமைப்பு அமர்வு, சமூக மற்றும் கல்வி சார்ந்த இடஒதுக்கீட்டை 50% சதவீதமாக அறிவிக்க மும்பை உயர்நீதிமன்றத்துக்கு உத்தரவிட்டது.

இந்த மராத்தா கோட்டா குறித்து மும்பை உயர்நீதிமன்றம் தெரிவிக்கையில், இந்த 16% இடஒதுக்கீட்டில் மாநில பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தின் அறிவுறுத்தலின்படி 13% கல்விக்காகவும், 12% வேலைக்காகவும் ஒதுக்கப்படுகிறது என தெரிவித்தது. இந்நிலையில் கடந்த செப்டம்பர் மாதம் 9 ஆம் தேதி அன்று, உச்ச நீதிமன்றத்தின் மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு, இந்த வழக்குகளை மாநில அரசு தீர்மானிக்கலாம் என பெரிய அமர்வுக்கு பரிந்துரை செய்தது. தற்போது இந்த வழக்கை 3 நீதிபதிகள் கொண்ட அமர்வு விசாரித்த போது, மராத்தா இட ஒதுக்கீட்டின் செயல்பாட்டை நிறுத்தி வைப்பதாக அறிவித்துள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!